நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் இந்திய கைதியும் உயிரிழப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அவ்வாறான அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இருவேறான வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய (8) நிலவரப்படி 28 ஆக அதிகரித்திருந்தது. இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் நேற்று (08) இரவு வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். படவிளக்கம் குறிப்பிட்ட கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள்…
மேலும் படிக்க