சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபிலவு மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியு றுத்திய ரவிகரன் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம்

இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; காணிவிடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம் முல்லைத்தீவு – கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 14.01.2026அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமாரதிஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு –…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

அம்பலாந் தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் பயங்கர விபத்தில் நால்வர் உயிரிழப்பு.

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறைனர்.  தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறைனர்.  குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும்  மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில்  காவல்துறைனர்.மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

இலங்கை க்கு வழங்கப் பட்ட உலங்கு வானூர்தி கள்.இலங்கை க்கு அனுப்பி வைப்பு.

அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக  உலங்கு வானூர்திகள்.தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10  வானூர்திகளும்.மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த வானூர்திகளும்., இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த  வானூர்திகளும்.இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சந்தேகத்திற் கிடமான இடத்திற்கு நீதிபதி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் . 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டனர். இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம்கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார். இப்புதைகுழி எதிர்வரும் 30 ஆம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி மூன்று பல்கலைக் கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக  பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களிடம் வாக்குமூலம் சேகரிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க கடற் படையின் பின்வாங்கல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி

விளிம்பில் மத்திய கிழக்கு: ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க கடற்படையின் பின்வாங்கல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦ இஸ்ரேலையும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இருப்பையும் உலுக்கிய ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் ஈரானின் உயரடுக்கு இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC), இஸ்ரேலிய இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் வளைகுடா பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் கொந்தளிப்பான இராணுவக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஈரானின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளின்படி, இஸ்ரேலின் வான்வெளி ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் வான்வழி…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் பாரிய தாக்குதல்

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று திங்கட்கிழமை  அதிகாலை ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.விமான நிலையத்திலிருந்த எரிபொருட் கிடங்கை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.மத்தியகிழக்கிலுள்ள அமெரிக்க நலன்களை அழிக்கும் வகையில் இத்தாக்குதல் அமைந்தது. இதனால் வானைத் தொடுமளவு புகை மண்டலம் தென்பட்டது. பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து தெரியும் அளவுக்கு அடர்த்தியான கரும்புகையை  வானத்தில்  காண முடிந்தது.  துபாய் ஊடக அலுவலகம் இந்த தாக்குதலை  உறுதிப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி  வைப்பதாக அறிவித்து, பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று  வலியுறுத்தப்பட்டது .தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக மயூர நெத்திகுமாரகே!

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.இந்த கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன்  பெட்ரோல்  மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல்  இருப்பதாகவும் அவர் கூறினார்.இவற்றை இறக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கேள்வி மனுக்கு அமைவாக ஏனைய அனைத்து எரிபொருள் கப்பல்களும் படிப்படியாக நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண மோசடி குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணை

மன்னாரில் பண மோசடி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை நேற்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தட்டுப் பாடு காரணமாக வைத்திய சாலைக் கட்டமைப்பைப் பராமரிப் பதில் கடும் சவால்கள்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக GMOA தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாளை (மார்ச் 17) நாடளாவிய ரீதியிலான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த GMOA தீர்மானித்துள்ளது. இதன்போது ஆரம்ப சுகாதார சேவை குறித்த விசேட அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வைத்தியர்களின் கோரிக்கை…

மேலும் படிக்க