கேப்பாபிலவு மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியு றுத்திய ரவிகரன் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம்
இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; காணிவிடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம் முல்லைத்தீவு – கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 14.01.2026அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமாரதிஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு –…
மேலும் படிக்க