பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்தியர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவலங்களுக்கும், 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ள்ளது. இதனைத் தொடர்ந்து 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119…
மேலும் படிக்க