தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சி புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு கிளிநொச்சி, 28 ஜூலை 2026 A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (28.07.2026) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் பாலம் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் – வர்த்தமானியில் வெளியான சட்டமூலம்

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான திருத்தச் சட்டமூலம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி;

கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு கணினி வழங்கிய ரவிகரன் எம்.பி; புதிதாகப் பொருத்தப்பட்ட மின்னிணைப்புக்களையும் பார்வையிட்டார் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலயத்திற்கு 27.07.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து மேசைக்கணினி வழங்கிவைக்கப்பட்டதுடன், மேல்மாடி வகுப்பறைகளுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் பொருத்தப்பட்ட மின்ணைப்புக்களையும் இதன்போது பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு – கோம்பாவில், விக்னேஸ்வர வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 10.03.2026அன்று குறித்த பாடசாலைக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள்தொடர்பில் நேரடியாக ஆராய்ந்தார். இதன்போது குறித்த பாடசாலைக்கு மேசைக்கணினி ஒன்று தேவையெனவும், மேல்மாடி வகுப்பறைகளுக்கு மின் இணைப்பு பொருத்தப்படவேண்டுமெனவும் பாடசாலைச் சமூகத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் பாடசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆவது இடம்!

இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது.  2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சொக்லேட் வடிவில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள் இலங்கை ப் பயணி கைது

தாய்லாந்திலிருந்து சுமார் 1 கிலோ 480 கிராம்    ‘குஷ்’   ரக போதைப்பொருளை சொக்லேட் பொதிகளில் மறைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கைப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று காலை  (27)  கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய  ஒருவரென என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நேற்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-403 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார். அவரது பயணப் பொதியைச் சோதனை செய்தபோது, சுமார் 1 கிலோ 480 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.   அவை இயந்திரத்தின் மூலம் சொசேஜ் வடிவில் தயாரிக்கப்பட்டு, அதன் மீது சாக்லேட் பூசப்பட்டு, காற்று புகாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்தது. மேலும்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் நேற்று வரை டெங்கு மரணம் 61; 82,011 பேர் பாதிப்பு

நாட்டில் நேற்று வரை பதிவாகியுள்ள  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதென்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த ஆண்டின்  நேற்றுவரையான காலப்பகுதியில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5639 பேரும், கண்டியில் 5634 பேரும், களுத்துறையில் 5355 பேரும் இரத்தினபுரியில் 4553 பேரும், காலியில் 4534 பேரும் பதிவாகியுள்ளனர். அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் மேலும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த 7 மாதங்களாக ஆசிரியர் நியமிக்கப்படாததைக் கண்டித்து தரம் 03 மாணவர்களுக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்கக் கோருதல் மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில்… பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனயீர்ப்பு போராட்டம்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் காங்கேசன் துறை எரிபொருள் களஞ்சிய த்திற்கு அருகில் திடீர் தீ

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென தீ பரவிய நிலையில், கடற்படையினர் மற்றும் பெற்றோலிய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்தைச் சூழவுள்ள வெற்றுக்காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அவற்றில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த காணிகளின் நிலைமை தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்டமை தொடர்பிலும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என எச்சரிக்கும் பதாகைகளை காட்சிப்படுத்துமாறு காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரியிடம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக எழுத்துமூலமான கோரிக்கை கடிதம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து;

ஐக்கிய இராச்சியத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமா குமரனுக்கு, ரவிகரன் எம்.பி வாழ்த்து; ஈழத் தமிழர் விவகாரத்திலும் கரிசனையோடு செயலாற்றுமாறும் வேண்டுகோள் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற இணை அமைச்சராக (Parliamentary Under-Secretary of State) அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான உமா குமரன் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்நோக்கிவரும் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதி, காணி உரிமைகள், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை முழுமையாக மீள நிறுவுதல், நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு மனித நேயமும் நீதியும் சார்ந்த தீர்வைக் காண்பதற்கான பன்னாட்டு முயற்சிகள், சமத்துவம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று வடக்கு கிழக்கில் இடம்பெற்றது. திருகோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்…

மேலும் படிக்க