சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு விஜயரத்தினம் சரவணன் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் 18.05.2026இன்று முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் 17ஆம் ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சரியாக காலை 10.30மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் இறுதிப்போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீரஞ்சன் ரினோசா என்பவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது. அதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உறவுகளை இழந்த உறவுகள் கதறி அழுது, கண்ணீர்சொரிந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். மேலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 2009 இரத்தம் பேசும் இறுதி நிலம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 2009 இரத்தம் பேசும் இறுதி நிலம் •⊰✾⊱•════════════•⊰✾⊱• எழுதியவர் — ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், புலனாய்வு மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் •⊰✾⊱•════════════•⊰✾⊱• முள்ளிவாய்க்கால் அது ஒரு கிராமத்தின் பெயரல்ல, மனித இனத்தின் மனச்சாட்சியில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு இரத்தச் சாட்சியம். அங்கே மரங்கள் கூட நிழல் தர அஞ்சின; வானம் கூட புகை மூட்டத்தால் கருப்புக் கவசம் போர்த்தியது; கடலும் சிவந்தது — ஈழத் தமிழரின் ரத்தம் அலைகளாய் அதில் கலந்ததால். சிங்கள பேரினவாத அரசின் இரும்புக் கைகளில் மனிதாபிமானம் தூக்கிலிடப்பட்டது; படுகொலைகள் மட்டும் தேசியக் கொள்கையாய் மாறின. பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மரண வலயம் கட்டப்பட்டது; உயிர் காக்க ஓடிய மக்களின் மேல் வானத்திலிருந்து நெருப்பு பொழிந்தது. அம்மாவின் மார்பில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஒரே நாளில் நீருக்கு பலியான 6 உயிர்கள்;

நேற்றையதினம்  தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   இதேவேளை, யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர்  நேற்றையதினம் பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய திலீபன் சந்தோஷ் என்ற சிறுவனே…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நந்தக்கடலில் முள்ளி வாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2026இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புளியங்கூடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது. தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில்  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று (16) இரவு 7.00 மணியளவில்   முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன் திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு  வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம்  வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம்  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,  பிரதி அமைச்சருமான உபாலி   சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள்,  திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த   ஈவு    வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

போரதீவில் முள்ளிவாய்க் கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை(15) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

முள்ளிவாய்க்கால் 2009: தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும்.

முள்ளிவாய்க்கால் 2009: தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசி கட்டமாக மட்டுமல்லாமல், உலக அரசியல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட வரலாற்றில் மிகுந்த சர்ச்சையையும் வேதனையையும் ஏற்படுத்திய காலமாகவும் நினைவுகூரப்படுகின்றன. பல தமிழர்களின் நினைவகத்தில், முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இராணுவ மோதலின் முடிவு அல்ல; அது பாதுகாப்பற்ற பொதுமக்கள் சிக்குண்ட மனிதாபிமான பேரழிவின் அடையாளமாக வாழ்கிறது. போரின் இறுதி கட்டத்திற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல ஆண்டுகளாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இன்று முற்பகல் 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால், உடனடியாக செயற்படுவதற்கு ஹெலிகாப்டர்களும் படையினரும் தயாராக இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.அதேவேளை, நேற்று பிற்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டும், எதிரிகளாக அல்ல”; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் இன்று (14) ஆரம்பமானது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைக்காக பெருமளவிலான ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் தற்போது பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். “ஒரு நிலையான இருதரப்பு உறவு உலகிற்கு நல்லது,” என்று குறிப்பிட்ட அவர், “நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிகளாக அல்ல,” என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். “நாம் இணைந்து ஒரு…

மேலும் படிக்க