அண்மை செய்தி தாயகச் செய்தி 

கொக்கிளாய் – புல் மோட்டை இணைப்பு பாலத்திற்கு நிதி ஒதுக்கு மாறு கோரிய – ரவிகரன்

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்பு பாலத்திற்கு 2027வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோரிய – ரவிகரன் எம்.பி; விரைவில் ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென – அமைச்சர் விமல் ரத்நாயக்க பதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்திற்குள் குறித்த கொக்கிளய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் 21.05.2026இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜி ற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன. கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர். உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை; நீதிமன்றில் வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சடுதியாக விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது: அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.10 நாட்களுக்கு முன்னர் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், இன்று 200 ரூபாவை நெருங்கியுள்ளது. அதேநேரம், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், வெள்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் போராட்டம்!

வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக…

மேலும் படிக்க