இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நள்ளிரவு முதல் அதிர்ச்சி; மீண்டும் எரிபொருள் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா ஆகும். 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 495 ரூபா ஆகும். ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 407 ரூபா ஆகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 478 ரூபா ஆகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபா ஆகும்.…

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

மனித உடலை அச்சுறுத்தும் போசாக்குக் குறைபாட்டு நோய்கள்

மனித உடலை அச்சுறுத்தும் போசாக்குக் குறைபாட்டு நோய்கள் சமச்சீர் உணவின்மையால் உருவாகும் அமைதியான மருத்துவப் பேராபத்து ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர்: ஈழத்து நிலவன் மருத்துவமனை மருந்தியல் நிபுணர் | அரச மருத்துவ ஆராய்ச்சியாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம் — உணவே உயிரின் முதன்மை மருந்து மனித உடல் என்பது எண்ணற்ற உயிரியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த அதிசய அமைப்பாகும். இதயத் துடிப்பு முதல் மூளையின் சிந்தனை வரையிலும், தசைகளின் இயக்கம் முதல் நோய் எதிர்ப்புச் சக்தி வரை அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது நாம் தினமும் உட்கொள்ளும் உணவாகும். உணவு என்பது வெறும் பசியைத் தீர்க்கும் பொருள் மட்டுமல்ல; அது உடலின் வளர்ச்சி, சக்தி, நோய் எதிர்ப்பு, ஹார்மோன் சுரப்பு மற்றும் மனநிலையைப் பாதுகாக்கும் உயிரியல் எரிபொருளாகும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மன்னார் திருக் கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று சனிக்கிழமை காலை வசந்த மண்டபத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து கொடி தம்பத்திற்கு எழுந்தருளப் பட்டு,கொடி தம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து உள் வீதி உலா இடம் பெற்றது. அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்த கரைக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அதைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்காக பாலாவி தீர்த்தத்தில் இருந்து தீர்த்த செம்புகளில் தீர்த்தங்களை எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் படிக்க