அழைப்பின் பேரில் ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங் கைக்கு வந்ததாக அலிரெசா தொல் கோஷ் தெரிவிப்பு.
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வந்த கப்பலை, அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இராணுவ சார்பற்ற ஓர் இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள், அந்த அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுபவை அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்…
மேலும் படிக்க