ஈரான் கொத்துக் குண்டுகளை பயன் படுத்துவதாக இஸ்ரேலிய இரா ணுவம் குற்றம் சாட்டு!
ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) மற்றும் சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானின் Fateh போன்ற ஏவுகணைகள் விண்ணிலிருந்து வரும்போது, தரைக்குச் சில கிலோமீட்டர் உயரத்திலேயே வெடித்துச் சிதறுகின்றன. அதன் உள்ளே இருக்கும் சிறிய குண்டுகள் ஒரு பெரிய கால்பந்து மைதானம் போன்ற பரப்பளவில் மழையெனப் பொழிகின்றன. இஸ்ரேலின் Iron Dome போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுக்கே இது பெரும் சவாலாக உள்ளது. ஒரு ஏவுகணையைத் தடுப்பது எளிது, ஆனால் விண்ணிலேயே பிரிந்து பல துண்டுகளாக வரும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைத் தடுப்பது மிகக் கடினம். சமீபத்திய தாக்குதல்களில் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் இத்தகைய குண்டுகள் விழுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈழப் போரின் போதும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதனை நிருபிக்கக்கூடிய சாட்சியங்களும் உள்ளன என்கின்றனர்…
மேலும் படிக்க