இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

(30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோல் 92: ரூ. 434 – ரூ. 20 ஆல் குறைப்பு – ரூ. ரூ. 414 ஒட்டோ டீசல்: ரூ. 407 – ரூ. 15 ஆல் குறைப்பு – ரூ. 382 அதன்படி, பெற்றோல் 92: ரூ. 414 பெற்றோல் 95: ரூ. 495 ஒட்டோ டீசல்: ரூ. 382 சுப்பர் டீசல்: ரூ. 478 மண்ணெண்ணெய்: ரூ. 285 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

நாடளாவிய ரீதியில் 7,188 இடங்களில் நுளம்பு பெருகும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் 7,188 இடங்கள் நுளம்பு பெருக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் இதுவரையில் 31 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பஸ் கட்டண திருத்தம் நாளை (01) முதல் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்

பஸ் கட்டண திருத்தம் நாளை (01) முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை பேருந்து சங்கங்களுடன் அவர்கள் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. எவ்வாறாயினும், இம்முறை பேருந்து கட்டண திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை நாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் பேருந்து…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏற்றி மக்கள் எழுச்சிப் போராட்டம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள அணையா விளக்கு திடல் பகுதியில், மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” என்ற அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த காலங்களில் செம்மணி பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில், செம்மணி அணையா விளக்கு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உலகளவில் பேசப்பட்ட ஒன்றான நிலையில், அங்கு தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

வவுனியாவில் ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுநரே செயற்படாதே, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகர சபையிடம் காணி உரிமம் உண்டா?, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவது நாளாக தொடர் போராட்டம்

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் 28.06.2026இன்று ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளநிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மேலும் இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி குமாரசிங்கம் கம்சன், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திருமதி.மாதுசனா…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி 

பலாலியில் இராணு வம் கையகப் படுத்திய காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – பலாலியில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி, பிரதேச மக்கள் இன்று (28) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டம், காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. தங்களது பூர்வீக நிலங்களை இழந்து 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”, “எங்கள் நிலங்களை விடமாட்டோம்”, “நிலமே எங்கள் மூச்சு; அது இல்லையேல் வாழ்வு போச்சு”, “அரசே, இராணுவத்தை வெளியேற்று; மக்கள் குடியேற வழிவகை செய்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் சுகாதார அமைச்சர்,

ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் 13ஆயிரத்து 600 தாதியர்களை சேவையில் இணைப்பதை இலக்காக கொண்டு புதிய செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 14 மாதங்களில் மாத்திரம் நாங்கள் சுமார் 5,000 தாதியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம். ஆனால், எல்லா இடங்களிலிருந்தும் வரும் ஒரே முறைப்பாடு என்னவென்றால், ‘தாதியர்கள் போதுமானதாக இல்லை’ என்பதுதான். கடந்த கொவிட் நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, பெருமளவிலான தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் எங்களது உத்தியோகத்தர் பட்டியலில் இருந்தாலும், தற்போது பணியில் இல்லை. இதுவே பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். 5,000 பேரை வேலைக்கு…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

கிளியில் வீதி சோதனை: 30-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள், 20-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் பறிமுதல்

கிளிநொச்சி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையின் போது, 30-க்கும் அதிகமான அதிவேக மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி விபத்துகளை குறைத்து, பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இலக்கத் தகடுகள் இல்லாமை, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்குதல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன. இதனையடுத்து குறித்த வாகனங்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கத்தி வெட்டு தாக்குத லுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து ள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 39 வயதுடைய ரகு துஷ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணை தகவலின்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் முன்னதாக வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில்…

மேலும் படிக்க