டெங்கு தீவிரம்; உயிரிழப்பு 72 ஆக உயர்வு
இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 94 ஆயிரத்து 292 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29ஆயிரத்து 962 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மேலும் 8 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமாகும். தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 779 பேரும், மத்திய மாகாணத்தில்…
மேலும் படிக்க