இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு தீவிரம்; உயிரிழப்பு 72 ஆக உயர்வு

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 94 ஆயிரத்து 292 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 29ஆயிரத்து 962 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில் மேலும் 8 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 52.92 சதவீதமாகும். தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 779 பேரும், மத்திய மாகாணத்தில்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பா எதிர்கொள்ளும் புதிய புவிசார் அரசியல் சந்திப்புப் புள்ளி

ஐரோப்பா எதிர்கொள்ளும் புதிய புவிசார் அரசியல் சந்திப்புப் புள்ளி எரிவாயு விலை உயர்வு, உக்ரைன் போர், மாஸ்கோ உளவுத்துறைப் பேச்சுவார்த்தை மற்றும் ரஷ்யாவின் அணு ஆயுதச் சமிக்ஞைகள் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ஐரோப்பாவின் எரிவாயு சந்தை புதிய நெருக்கடியை நோக்கி ஐரோப்பா மீண்டும் ஒரு கடினமான எரிசக்திக் காலத்தை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் தற்போதைய நிலைமை இரண்டு ஆயிரத்து இருபத்திரண்டு ஆம் ஆண்டின் எரிசக்தி நெருக்கடியை அப்படியே மீண்டும் பிரதிபலிப்பதாக மட்டும் கருத முடியாது. மத்திய கிழக்குப் போர், ஹோர்முஸ் நீரிணை வழியாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் ஏற்பட்ட நிச்சயமின்மை மற்றும் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே திரவ எரிவாயு கப்பல்களுக்கான போட்டி ஆகியவை உலக…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நேபாளம், சீனாவில் பேரழிவு வெள்ளம்! உதவிக்கரம் நீட்டும் ஐ.நா

நேபாளம் மற்றும் சீனாவில் பெரும் உயிரிழப்புகளையும், பலர் காணாமல் போகும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தான் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ள குட்டெரெஸ், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளி அமைப்புகளும் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன, மத மோதல் களுக்கு இனி இட மில்லை.! – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், அந்தக் கொடூரமான அனுபவங்களின் பாதிப்பை இன்றைய தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பதால் மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை…

மேலும் படிக்க