கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு : குடும்பம் மீது தாக்குதல்
கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக்குழு அட்டகாசம்: கைக்குழந்தையுடன் இருந்த குடும்பம் மீது தாக்குதல் முயற்சி! யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (21) இரவு புகுந்தல் வன்முறைக்குழு ஒன்று, வீடுகளைச் சேதப்படுத்தியும் வாகனங்களை அடித்து நொருக்கியும் பாரிய அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் திரண்டு வந்த வன்முறைக்குழுவினர், கட்டைக்காடு கிழக்கிலுள்ள வீடு ஒன்றின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றுள்ளனர். அந்த வீட்டில் கைக்குழந்தைகளுடன் ஒரு குடும்பம் தங்கியிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறையின் போது வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த உழவு இயந்திரம் மற்றும் வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. குறித்த வன்முறைக்குழுவினர் மதுபோதையில் நீண்டகாலமாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்…
மேலும் படிக்க