பொதுவான செய்திகள் 

அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு.திறந்த கலந்துரையாடல்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், இன்று 20.01.2026 அன்று தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் அரசியற் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 100 பேரளவில் பங்குபற்றியிருந்தனர். தொடக்க உரையாற்றிய அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி.க. குருபரன் (யாழ் பல்கலை சட்டத்துறை முன்னாள் தலைவர்) பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததைத் சுட்டிக்காட்டி, மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகின்ற விடயமானது என்.பி.பியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்னும் விடயத்தினை ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர் லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் உள்ள விடயத்தினையும் மேற்கோள்காட்டி, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கண்டி பிரதான வீதியின் இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!!

இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!! கொழும்பு கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) இரண்டு பேருந்துகளும் டிப்பர் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளன..

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை வழங்கும் ஜூலி சங்

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக விமானங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த விமானங்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றதாகவும் டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த இந்த விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் விமானங்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டி இந்த 10 விமானங்களும் விமானப்படையின் திறனை அதிகரிப்பதோடு, விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவுமென தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்கவுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது

ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது   வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய இச்சந்தேக நபரின் பயணப்பொதியில் 1.163 கிலோகிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், இவர் இலங்கை தனியார் நிறுவன விமானப் பணிப் பெண்ணென்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது அவரின் பயணப்பொதியில் தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புத்தாண்டில் சோகம்: மருதங்கேணியில் குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலில் பலி

புத்தாண்டில் சோகம்: மருதங்கேணியில் குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலில் பலி யாழ்ப்பாணம், 2026 ஜனவரி 01: யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4:00 மணி அளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட து. தவநேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று மாலை 4:00 மணி அளவில்  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மருதங்கேணி பகுதியில் உள்ள ஆலயமொன்றில் திருவெம்பாவை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தவநேசன் என்பவரை, பின்னால் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தியுள்ளார். முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணம் செய்தியாளர் 01 01 2026 pm 20.03    

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சிறுமி உயிரிழப்பு இரு மருத்துவர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனை தொடர்ந்து  கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள். மனுவில் உள்ள முக்கிய கோரிக்கையாக.. 1)டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 2)இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 28 திகதி மாலை மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி கடலில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.உடுத்துறை வடக்கைச் சேர்ந்த விஜயமோகன் ஜெசிந்தன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழ் தே. ம. மு. கோரிக்கை க்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை

ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஈரோடு வே.பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை; சீனத் தூதுக்குழுவும் இன்று வருகை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரண உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதோடு, இன்று மதியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். ​தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இரவு இலங்கையிலிருந்து…

மேலும் படிக்க