இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கைக்கு விசா விலக்கு இரத்து! தாய்லாந்து

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது. திருத்தப்பட்ட விசா விலக்கு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போதுள்ள 60 நாட்கள் வரையிலான விசா இல்லா பயணச் சலுகையை இழக்கவுள்ளனர். இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தின் இணையவழி e-Visa முறையின் ஊடாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். சுற்றுலா விசா மூலம் ஒரு பயணத்தின்போது 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். புதிய நடைமுறையின் கீழ்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்தியா செல்ல முயன்ற 13 பேர் திருப்பி அனுப்பப்பட்டு கைது

கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்ற குறித்த 13 பேர் தொடர்பில் இந்திய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர்களை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்ப இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கைக்கு திரும்பிய 13 பேரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கருங்கொடித்தீவு, மாம்பிட்டி, மதவாச்சி, ஹல்தும்முல்லை, வெல்லவாய, மொணராகலை, மாவடிச்சேனை, பலாங்கொடை, திருகோணமலை, பதுளை மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை திரும்பப் பெறப்போவதில்லை ஜனாதிபதி

ஊழல்வாதிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே கறுப்பு ராஜ்யத்தைத் தகர்க்க முடியுமெனவும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லையெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களும் மக்களுக்காகவே எடுக்கப்படுவதால் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். புலத்சிங்ஹல பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தீர்ப்பு கிடைத்தவுடன், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நாம் சட்டத்திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். நாம் எவ்வித பயமுமின்றி முன்னோக்கிச் செல்வோம். நாம் முன்னோக்கிச் செல்லும்போது,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா செல்லும் இலங்கை அதிகாரிகள் குழு

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் பயணம் கச்சதீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இந்தியாவிலிருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிவரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் மற்றும் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்துக் கலந்துரையாடுவதற்கே இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்கே இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் வழங்கப்படும். கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எந்தவித ஐயமும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லிட்ரோ எரிவின் புதிய விலை

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எல்.பி. எரிவாயு விலைகளை குறைக்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன், நாணய மாற்று விகிதம் தொடர்பான சவால்களும் காணப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் 5ஆம் திகதியான இன்று முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருகின்றன. இதன்படி,  12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,365 ரூபாவாகும். முன்னதாக இது 4,465 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சிலிண்டர் 1,792 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிறிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐ.நா. அதிருப்தி

எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, அதனை விரைவாக இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வெளிநாடுகளி லிருந்தவாறு இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையில் விசேட கவனம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பில்,வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளிலிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பான பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்பதற்கான நிகழ்வின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தேர்தல் ஆணைக்குழு, தேர்தல்கள் முறைமைக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் ஆதரவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிராந்திய பிரதிநிதிகளை உத்தியோகபூர்வமாக வரவேற்பதும், வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டில் வாக்களிப்பது மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். இலங்கையில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது

பெண்ணொருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அனுமதியின்றி பரப்பிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினரால், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், முறைப்பாட்டாளரை திருமணம் செய்து பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று (3) அவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும், மூன்றாம் குற்றச்சாட்டுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, நீதிமன்றம்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மின்சார விநியோக த்தில் எந்த இடையூறும் இல்லை எரிசக்தி அமைச்சகம்

போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்தபோதிலும் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை சமர்ப்பித்த பின்னர், ஊடகங்களிடம் பேசியபோது எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். இரண்டு நிலக்கரி சரக்குகள் விரைவில் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கப்பல் நாளை (04) மற்றும் இரண்டாவது செப்டெம்பர் 12 அன்று வந்து சேரும்.இரு சரக்குக் கப்பல்களில் இருந்தும் நிலக்கரி இறக்கப்பட்டவுடன், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும்…

மேலும் படிக்க