இலங்கைக்கு விசா விலக்கு இரத்து! தாய்லாந்து
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது. திருத்தப்பட்ட விசா விலக்கு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போதுள்ள 60 நாட்கள் வரையிலான விசா இல்லா பயணச் சலுகையை இழக்கவுள்ளனர். இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தின் இணையவழி e-Visa முறையின் ஊடாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். சுற்றுலா விசா மூலம் ஒரு பயணத்தின்போது 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். புதிய நடைமுறையின் கீழ்,…
மேலும் படிக்க