இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கைக்கு விசா விலக்கு இரத்து! தாய்லாந்து

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது. திருத்தப்பட்ட விசா விலக்கு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போதுள்ள 60 நாட்கள் வரையிலான விசா இல்லா பயணச் சலுகையை இழக்கவுள்ளனர். இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தின் இணையவழி e-Visa முறையின் ஊடாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். சுற்றுலா விசா மூலம் ஒரு பயணத்தின்போது 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். புதிய நடைமுறையின் கீழ்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இந்தியா செல்ல முயன்ற 13 பேர் திருப்பி அனுப்பப்பட்டு கைது

கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்ற குறித்த 13 பேர் தொடர்பில் இந்திய சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர்களை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்ப இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கைக்கு திரும்பிய 13 பேரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கருங்கொடித்தீவு, மாம்பிட்டி, மதவாச்சி, ஹல்தும்முல்லை, வெல்லவாய, மொணராகலை, மாவடிச்சேனை, பலாங்கொடை, திருகோணமலை, பதுளை மற்றும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை திரும்பப் பெறப்போவதில்லை ஜனாதிபதி

ஊழல்வாதிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே கறுப்பு ராஜ்யத்தைத் தகர்க்க முடியுமெனவும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லையெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் அனைத்துத் தீர்மானங்களும் மக்களுக்காகவே எடுக்கப்படுவதால் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். புலத்சிங்ஹல பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தீர்ப்பு கிடைத்தவுடன், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நாம் சட்டத்திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். நாம் எவ்வித பயமுமின்றி முன்னோக்கிச் செல்வோம். நாம் முன்னோக்கிச் செல்லும்போது,…

மேலும் படிக்க