இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் களிலிருந்து 463 கிலோ ஐஸ் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து நேற்று 800 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப் பொருள் தொடர்பில், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்படி கொள்கலன்களில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 463 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், இது தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கொள்கலனில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில், துவாய்களால் சுற்றப்பட்ட நிலையில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப் பொருள் நாட்டுக்குக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வரட்சியால் ஏழு மாவட்டங்கள் பாதிப்பு;

நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 82,000 பேர், குடிநீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.நாட்டின் 24 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனைத் தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

துப்பாக்கி லைசன்ஸ்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடுகள் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும் துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கிடையில், 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு;

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 30.08.2026நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, விருந்தினர்கள் மற்றும் சாதனையாளர் வரவேற்புடன் ஆரம்பமானது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், புதுக்குடியிருப்பு பங்கிற்குட்பட்ட சாதனையாளர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் செபஸ்தி அருள்ராஜ்குமார், வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.மதிவதனி,…

மேலும் படிக்க