பொதுவான செய்திகள் 

மின்சார விநியோக த்தில் எந்த இடையூறும் இல்லை எரிசக்தி அமைச்சகம்

போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்தபோதிலும் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை சமர்ப்பித்த பின்னர், ஊடகங்களிடம் பேசியபோது எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். இரண்டு நிலக்கரி சரக்குகள் விரைவில் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கப்பல் நாளை (04) மற்றும் இரண்டாவது செப்டெம்பர் 12 அன்று வந்து சேரும்.இரு சரக்குக் கப்பல்களில் இருந்தும் நிலக்கரி இறக்கப்பட்டவுடன், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பில் பெருமளவு போதைப் பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பின் வெல்லம்பிட்டிய மற்றும் மட்டக்குளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (CCD) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் நேற்று (02) நண்பகல் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 130 மின்னணு சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய சந்தேகநபர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!– அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர் யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் 2.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷெனன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, தொலைபேசி இணைப்புக் கம்பமொன்றையும் உடைத்துக்கொண்டு, ஹட்டன் ஓயாவை நோக்கி நீர் செல்லும் கால்வாயொன்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றபோது காரில் மூவர் பயணித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு ஆசனப்பட்டிகளை அணிந்திருந்ததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸ்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எல்-நினோ தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை…

மேலும் படிக்க