கொழும்பில் பெருமளவு போதைப் பொருட்களுடன் மூவர் கைது
கொழும்பின் வெல்லம்பிட்டிய மற்றும் மட்டக்குளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (CCD) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் நேற்று (02) நண்பகல் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 130 மின்னணு சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய சந்தேகநபர்…
மேலும் படிக்க