இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வெளிநாடுகளி லிருந்தவாறு இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையில் விசேட கவனம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பில்,வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளிலிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பான பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்பதற்கான நிகழ்வின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தேர்தல் ஆணைக்குழு, தேர்தல்கள் முறைமைக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் ஆதரவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிராந்திய பிரதிநிதிகளை உத்தியோகபூர்வமாக வரவேற்பதும், வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டில் வாக்களிப்பது மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். இலங்கையில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது

பெண்ணொருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அனுமதியின்றி பரப்பிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினரால், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், முறைப்பாட்டாளரை திருமணம் செய்து பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று (3) அவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும், மூன்றாம் குற்றச்சாட்டுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, நீதிமன்றம்…

மேலும் படிக்க