இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா செல்லும் இலங்கை அதிகாரிகள் குழு

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் பயணம் கச்சதீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இந்தியாவிலிருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிவரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் மற்றும் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்துக் கலந்துரையாடுவதற்கே இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்கே இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் வழங்கப்படும். கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எந்தவித ஐயமும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லிட்ரோ எரிவின் புதிய விலை

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எல்.பி. எரிவாயு விலைகளை குறைக்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன், நாணய மாற்று விகிதம் தொடர்பான சவால்களும் காணப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் 5ஆம் திகதியான இன்று முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருகின்றன. இதன்படி,  12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,365 ரூபாவாகும். முன்னதாக இது 4,465 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த சிலிண்டர் 1,792 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிறிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐ.நா. அதிருப்தி

எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, அதனை விரைவாக இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும் படிக்க