தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரம் – தமிழரசுக் கட்சியின் ஐந்து தரப்பினருக்கு எதிராக வழக்கு

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் கட்சியின் விதிமுறைகளை மீறி தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்து, குறித்த நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய ஐந்து தரப்பினருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஞானசார தேரர்

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (15) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சிறிதுவ கிராமத்தைச் சேர்ந்த மொலக்கொட கெதர சாந்தினி பிரேமலதா என்ற  49 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தபோது, தேங்காய் குவியலுக்குள் மறைந்திருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துங்கள் – மீனவ அமைப்புகள் வேண்டுகோள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்கரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விரும் நிலையில் ஏனைய சிறு தொழில் மீனவர்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மீனம்பா படகுகளை கடற் படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில இடம் பெறுவதாக அப்போது…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடு கள் ரவிகரன் எம்.பி

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு; பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி தெரிவிப்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொலிசாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இருந்திருக்கவில்லையெனவும், நடுநிசியில்கூட பெண்கள் உலவக்கூடிய நிலையிருந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தற்போது அத்தகைய நிலை இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.09.2026நேற்று இடம்பெற்றபோது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக…

மேலும் படிக்க