தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் புத்தூரில் வயோதிப பெண் கொடூரக் கொலை

யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு – சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் புத்தூர் மேற்கு, சிவன் கோவில் அருகே அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டபோது, வயோதிப பெண் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உள்ளகப் பொறி முறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார்

தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்.” – என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின் இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் ‘தமிழ் மக்களின் நீதிக்கான குரல்’ எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக் கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- “போர்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் டெங்கு நோய் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செப்டம்பர் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த டெங்கு நோயாளர்களின் பதிவைக் கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 20,742 ஆகும். இது தவிர, கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க