இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விமான நிலையத்தில் ரூ. 32 கோடி குஷ் பொதிகளை கைவிட்டு தப்பிய பயணி!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப்பொதி பெல்ட் அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரு பயணப் பெட்டிகளிலிருந்து சுமார் ரூ. 320 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இன்று (15) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளானது காற்று புகாதவாறு பிரத்தியேகமாக அடைக்கப்பட்ட 60 பொதிகளாக இரண்டு பயணப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து நேற்றைய தினம் (14) கொழும்பு வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 405 எனும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவராலேயே இந்தப் பயணப்பொதிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விமான நிலையத்தில் வைத்து, தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, குறித்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தியாகிய திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் {15 09 1987}

தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், இந்திய அமைதிப்படைக்கு எதிராகவும் 12 நாட்கள் நீரின்றியும் உணவின்றியும் சொட்டு நீர் கூட அருந்தாமல் சொட்டுச் சொட்டாக உயிரைத் துறந்த வரலாற்றின் ஒப்பற்ற தியாகி ஆவார். தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்களின் 1987 உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளையும் சுருக்கமாகப் பதிவு செய்கிறது. இன்று செப்டம்பர் 15 என்பதால், அவரது உண்ணாவிரதம் தொடங்கிய நாளை நினைவுகூரும் நாளாகவும் இது அமைகிறது. அவர் 1987 செப்டம்பர் 26 அன்று, 12 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்காலப்…

மேலும் படிக்க