கீரிமலை – மாவிட்டபுரம் பகுதிகள் குப்பைக் கிடங்காகும் அபாயம்;
யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகள் எதிர்காலத்தில் பாரிய குப்பைக் கிடங்காக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட முக்கியமான ஆலயங்களை அண்மித்த பகுதிகளில், குறிப்பாக மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியை அண்மித்துள்ள பாரிய குழிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் குறித்த பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக பாரிய குழிகள் உருவாகியுள்ளன. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள்…
மேலும் படிக்க