தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு நேரம் நீடிப்பு!

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர்.பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர். இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு இராணுவத்தினர், மறுத்துள்ளனர். அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை ஒரு மணி நேரம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் காவல்துறை யினர்.துரத்திச் சென்ற உந்துருளி.கோர விபத்து

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர்.துரத்திச் சென்ற உந்துருளி.ஒன்று, வீதியில் பயணித்த மற்றொரு   உந்துருளியுடன். மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல்துறையினர்.  உந்துருளி.சென்ற நபர் ஒருவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், காவல்துறையினர். துரத்திச் சென்ற  உந்துருளி.கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு உந்துருளி.மீது பலமாக மோதியுள்ளது. தப்பியோட முயன்ற  உந்துருளி.மோதியதில், மற்றைய  உந்துருளி.பயணித்த நபர் படுகாயமடைந்து, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர். சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.இவ்விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மீகொடையில் நள்ளிரவில் அரங்கேறிய பெரும் சோகம் ஆறு பேர் உயிரிழப்பு.

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ஹைலெவல் வீதி, மீகொடை சந்திக்கு அருகில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (31), அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த கெப் வண்டியொன்று, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’ (தானசாலை) ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த ஆண்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ஹங்வெல்ல, அவிசாவளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த பெண்களில் 15 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்தை மேன்படுத்த ஜப்பான் 1.33 மில்லியன் டொலர் நிதியுதவி

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதையும், நன்னீர் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) மதிப்பிலான திட்டம், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழில்நுட்ப ஆதரவுடன் ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இத்திட்டம், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் கூண்டுகளை நிறுவுதல், தடுப்பணை வலை அமைப்புகளை வழங்குதல், இங்கினியகல மீன் இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துதல், மீன்பிடி சங்கங்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்கள், மற்றும் முதல் வளர்ப்புச் சுழற்சிக்கான மீன் குஞ்சுகள் மற்றும் தீவனத்தை இலவசமாக விநியோகித்தல் ஆகியவை இதன் முக்கிய முன்னெடுப்புகளில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நள்ளிரவு முதல் அதிர்ச்சி; மீண்டும் எரிபொருள் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா ஆகும். 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 495 ரூபா ஆகும். ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 407 ரூபா ஆகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 478 ரூபா ஆகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபா ஆகும்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மரண தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து நஞ்சருந்தி உயிரை மாய்க்க முயற்சி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சை அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதைக் கண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, உடனடியாக அவரை மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சம்பவம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப்புடன் ஒருவர் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வாகன உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த 39 வயது சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கொட்டாவ பொலிஸ் பகுதியில் மேற்கு மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்களைக் கொண்டு குறித்த ஜீப் தயாரிக்கப்பட்டதாகவும், செல்லுபடியாகும் வருவாய் உரிமம், காப்பீட்டுச் சான்றிதழ் அல்லது புகை உமிழ்வு சோதனை அறிக்கை இல்லாமல் அது இயக்கப்பட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். வாகனம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றதுமேலதிக விசாரணைகள்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

தனியார் வங்கி கிளையில் திடீரென தீ விபத்து

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள மூலம் சந்தேகிக்கப்படுகின்றது. விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புனித வெசாக் தின த்தை முன்னிட்டு,61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைச்சாலையில் உள்ள 61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான இன்ற சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு மற்றும்  இன்று மற்றும் நாளை ஆகிய  இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவானது  நேற்று மாலை முதல் அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன…

மேலும் படிக்க