இலங்கை செய்தி. செய்திகள் 

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்பிரகாரம் ,பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 1750 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை என்பது பல வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.பெருந்தோட்ட கம்பனிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்துக்கமைய, இம்மாதத்திலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2000 ரூபா நாணயத் தாள்கள் குறித்து மத்திய வங்கி  விசேட அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த புதிய நாணயத்தாள்களின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களடங்கிய தகவல்களே மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாளின் நம்பகத் தன்மையை எளிதாக அடையாளம் காண்பதற்கான அறிவுரைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த 2000 ரூபா நாணயத் தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால்,வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகிறது.இதிலிருந்து போலித்தாள்களை அடையாளம் காண முடியும். மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

56ஆவது உலகப் பொருளாதார மகாநாட்டிற்கு. சுவிட்சர்லாந்து புறப்பட்டார் பிரதமர் ஹரிணி

சுவிட்சர்லாந்தின்(Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் இலங்கையிலிருந்து புறப்பட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF): 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (19) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். “A Spirit of Dialogue” (உரையாடல் மனப்பாங்கு) எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் – 2026 கூட்டப்படவுள்ளது. இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000 இற்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர். இவ்விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம் !

வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம் ! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்றைய தினம்.மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, அதனை வீதியோரத்திலிருந்த பாலத்திற்குள் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக வந்த கார், வல்லைப் பகுதியில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இதன்போது கார் அங்கிருந்த சேற்றுக்குள் புதைந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் பகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விபத்துக்குள்ளான காரை மீட்டெடுக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு ✦ அறிமுகம் : காலத்தைக் கடந்த ஒரு கடிதம் 1991 அக்டோபர் 21 அன்று, கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) அவர்கள் ஜெனீவா நகரிலிருந்து தனது மனைவி டாலி அவர்களுக்கு ஒரு மிகுந்த தனிப்பட்ட கடிதத்தை எழுதினார். முதற்பார்வையில் இது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட உரையாடலாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அது ஒரு தத்துவ அறிக்கையாகவும், ஒரு அரசியல் சாட்சியமாகவும், மேலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அறவழி வழிகாட்டியாகவும் விரிவடைகிறது. முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தபின், 2026 ஜனவரி 16 அன்று, இந்தக் கடிதம் வெறும் நினைவாக மட்டுமல்ல; ஒரு வரலாற்று ஆவணமாக உயர்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த வாழ்வின் உணர்வுப்பூர்வமான வலி,…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

சந்தியில் ஐரோப்பா: ரஷ்யாவை சமநிலைப்படுத்துதல், இழந்த இராஜதந்திரம்

சந்தியில் ஐரோப்பா: ரஷ்யாவை சமநிலைப்படுத்துதல், இழந்த இராஜதந்திரம் மற்றும் ஐரோப்பிய முக்கியத்துவத்தின் நெருக்கடி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ உக்ரைன் போர் ஒரு தீர்மானக் கட்டத்தை எட்டியுள்ள வேளையில், ஐரோப்பா ஓரங்கட்டப்பட்டும், பிளவுபட்டும், தனது சொந்த மூலோபாயக் குரலை வரையறுக்கப் போராடிக்கொண்டும் நிற்கிறது ✦ ஜெர்மனியின் திருப்பம்: பிரடெரிக் மெர்ஸ் மற்றும் முழுமையான தனிமைப்படுத்தலின் முடிவு ஜெர்மன் அதிபர் பிரடெரிக் மெர்ஸ் (Friedrich Merz) வெளியிட்டுள்ள கருத்துக்கள், 2022க்குப் பிந்தைய பெர்லின் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு ஆழமான மற்றும் தீர்மானமான மாற்றத்தைக் குறிக்கின்றன. பல ஆண்டுகளாக மாஸ்கோவுடன் எந்தவித ஈடுபாட்டையும் மறுத்து வந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாகத் தவிர்த்து வந்த ஒரு புவிசார் அரசியல் உண்மையை மெர்ஸ் இப்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்: ரஷ்யா ஒரு ஐரோப்பிய வல்லரசு; அதை ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பிலிருந்து நீக்கிவிட முடியாது. தனது மிகப்பெரிய ஐரோப்பிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யானை தாக்கி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் உயிரிழந்துள்ளார்

துணுக்காய், தேறாங்கண்டல் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். கடந்த  15 2026 அன்று இரவு, வயல் நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக காவலில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் இரவு வேளைகளில் வயல் காவலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அநுர கூட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படும் மக்கள்: சு.நிசாந்தன்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிகழ்வுகளுக்கு  யாழ் அரச பேருந்துகள் மற்றும் அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக மக்கள் அழைத்துச் செல்லப்படுவதாகத் தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளர் சு.நிசாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அந்த பேருந்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார். கிராம சேவகர் கூட இன்றைய நிகழ்வுக்கு மக்களை திரட்டி ஏற்றிச்சென்றார் என்றும் தகவல் வந்துள்ளது. அதைவிட பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களும் அழுத்தத்தின் மத்தியில் ஜனாதிபதியின் நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் சேவைகளை பெறுவதற்கு சென்ற மக்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த போது என்ன செய்தார்களோ…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

நாட்டில்,2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோல்ட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.Hayleys Fentons Limited நிறுவனம் இத்திட்டத்தை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாவிற்கு வழங்கப்படவுள்ள இத்திட்டத்தை மார்ச் 2027 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான ஸ்மார்ட் வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல்,தேசிய நீர் வழங்கல் சபையுடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நீர்கொழும்பு கடற்பரப்பில் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலை

நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான கப்பலொன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் நடாத்திய சுற்றிவளைப்பி்ன்போதே கடற்பரப்பில் கைவிடப்பட்ட பதினாறு (16) பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க