இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு தழுவிய அடை யாள வேலை நிறுத்தம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார். வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேக நபர்கள் கல்பிட்டி யவில் கைது.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர். கடந்த 31ஆம் திகதி கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 98 கி.கி ஏலக்காயை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பரப்பை உள்ளடக்கி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது, மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்பத்தெட்டு (98) கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களை கடற்படையின் கைப்பற்றினர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வெப்பம் காரண மாக மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்

கடும் வெப்பம் காரணமாக மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நிம்மதியற்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மனநல மருத்துவர் விந்தியா விஜயபண்டார எச்சரித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிக வெப்பத்தினால் ஏற்படும் நீரிழப்பு, உடலில் உள்ள இரசாயன மற்றும் ஹோர்மோன் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி ஒருவரின் மனநலத்தைப் பாதிக்கின்றது.மூளையில் உள்ள இரசாயனங்கள் மற்றும் ஹோர்மோன்களின் தாக்கம் காரணமாக ஒருவரது மனநிலை வீழ்ச்சியடையக்கூடும்.இரவு நேரங்களில் நிலவும் அதிகவெப்பம் தூக்கத்தைச் சீர்குலைப்பதோடு, இது மேலும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றது. கடும் வெப்பமானது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற நிலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.கடும் வெப்பத்தினால் நாட்பட்ட நோயாளிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வெப்பமான காலநிலையில் மது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி தர்மபுரம் பகுதி யில் கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.தர்மபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மோட்டார் கிரைண்டர் ரக வாகனத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18  வயதுடைய  தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகிய இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதம்

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.

மேலும் படிக்க