சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு சேறு பூசுகின்றனர்: சிவமோகன் காட்டம்

தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு சேறு பூசுகின்றனர்: சிறிதரன் மீதான நடவடிக்கை குறித்து தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி சி.சிவமோகன் காட்டம்   திருட்டுத்தனமாக, அரசியல் அலங்கோலத்தனமாக, துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிறிதரன் எம்.பி மீதான நடவடிக்கை குறித்து முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனுக்கும், சிறிநேசனுக்கு எதிராக தமிழரசுகட்சி என்ற போர்வையில் அவிழ்த்துவிடப்படும் சேறு பூசல்கள் தொடர்பாக நாம் கவனம் எடுத்துள்ளோம். குறித்த இருவரும் அவர்களது மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று நேரடியாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக தமிழரசுக் கட்சி என்ற போர்வையில் ஊடக சேறு…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

விளிம்பில் உலகம்: ஹைப்பர்சோனிக் போர், எரிசக்தி சாம்ராஜ்யங்கள் மற்றும் பழைய கூட்டணிகளின் சரிவு

விளிம்பில் உலகம்: ஹைப்பர்சோனிக் போர், எரிசக்தி சாம்ராஜ்யங்கள் மற்றும் பழைய கூட்டணிகளின் சரிவு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ உக்ரைனின் உறைந்த நகரங்களிலிருந்து ஆர்க்டிக் மற்றும் கரீபியன் வரை – ஏவுகணைகள், எண்ணெய் மற்றும் அதிகார பலத்தின் மூலம் ஒரு புதிய உலக ஒழுங்கு வடிவமைக்கப்படுகிறது ☢••═══════════════════••☢ ╭──────────────────────╮ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் ╰──────────────────────╯ 11/01/2026 ❄️ ஆயுதமாகும் குளிர்காலம்: உக்ரைனில் ரஷ்யாவின் மூலோபாயத் தீவிரவாக்கம் உக்ரைன் போர் தற்போது அதன் மிக இருண்ட கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இது இராணுவ ரீதியாக மட்டுமல்ல, மனிதாபிமான ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தும் நிலையாக மாறியுள்ளது. உறைபனி காலத்தை பொதுமக்களின் துயரத்தை அதிகரிக்க வேண்டுமென்றே பயன்படுத்துவதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். –10°C க்கும் கீழ் வெப்பநிலை சரிந்த நிலையில், ரஷ்யப் படைகள் மின்சார உள்கட்டமைப்புகள், வெப்பமூட்டும் அமைப்புகள்,…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம்

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம்   ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டின் மதச்சார்பு ஆட்சிக்கு எதிரான புரட்சியாக வெடித்துள்ளது. சுமார் 2 வாரங்களை நெருங்கும் இப்போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரானின் தலைமை வழக்கறிஞர் முகமது மொவாஹேதி ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கையில், “போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் ‘கடவுளின் எதிரிகளாக’ (Enemy of God) கருதப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஈரானிய சட்டப்படி இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மட்டக்களப்பில் மின்கம்பத்துடன் மோதிய நோயாளர் காவு வண்டி ; 2 பேர் படுகாயம்

மட்டக்களப்பு மின்கம்பத்துடன் மோதிய நோயாளர் காவு வண்டி ; 2 பேர் படுகாயம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி  காவல்துறை உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பம் ஒன்றுடன் நோயாளர் காவு வண்டி.மோதியதில் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன் நோயாளர் காவு வண்டி.முற்றாக சேதமடைந்துள்ளது.இதனால் மின்சாரம் குறித்த பிரதேசத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தில் சாரதி உட்பட உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளர் காவு வண்டி. பாதையை விட்டு விலகி மின்கம்பத்திலும், அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதாரத் திணைக்களத்துக்கு கீழுள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு சொந்தமான நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவு வண்டி. சுமார் ரூ. 1 கோடி 75…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

, டக்ளஸ் தேவானந்தா சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டிய ஒருவர்.சுகாஸ்

டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புடைய சாதாரண குற்றவாளி கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புடைய சாதாரண குற்றவாளி கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் கடுமையாக சாடியுள்ளார். அவர் அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும், கடத்தல்களுக்கும், காணாமலாக்கல்களுக்கும், வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய சிறீலங்காவின் ஆகப்பெரும் குற்றவாளிகளில்  முதன்மையானவர் என சட்டத்தரணி சுகாஸ் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா என்பவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டிய ஒருவர். உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் கொலைகள் உட்பட குற்றங்களைச் சாவகாசமாகச் செய்த சர்வதேசக் குற்றவாளி! சூளைமேடு…

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

Itching (அரிப்பு) – ஒரு Pharmacist ஆக நோயாளிக்கு வழங்க வேண்டிய முழுமையான ஆலோசனை

Itching (அரிப்பு) – ஒரு Pharmacist ஆக நோயாளிக்கு வழங்க வேண்டிய முழுமையான ஆலோசனை ┉┉┉┉┉┉┉┉┉ ┅┅┅┅┅┅┅┅ 1️⃣ முதலில் கேட்க வேண்டிய அவசியமான கேள்விகள் (Assessment) 👉 எந்தக் கிறீமையும் பரிந்துரை செய்வதற்கு முன், நோயாளியிடம் இந்தக் கேள்விகளை கேட்பது கட்டாயம்: 🔹 அரிப்பு தொடர்பான தகவல்கள் * அரிப்பு எங்கு உள்ளது? (கை, கால், உடல், முகம், தனிப்பட்ட உறுப்புகள்) * எத்தனை நாட்களாக இந்த அரிப்பு தொடர்கிறது? * நாள் முழுவதும் உள்ளதா? அல்லது இரவில் அதிகமாக உள்ளதா? * சிவப்பு, சிரங்கு, வீக்கம், புண், சீழ் போன்றவை உள்ளனவா? 🔹 தூண்டுதல் காரணங்கள் * சமீபத்தில் புதிய சோப்பு / டிடர்ஜெண்ட் / வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியுள்ளீர்களா? * அதிகமாக வியர்வை ஏற்படுகிறதா? * பூச்சி கடித்த வரலாறு உள்ளதா? *…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கண்டி பிரதான வீதியின் இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!!

இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!! கொழும்பு கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) இரண்டு பேருந்துகளும் டிப்பர் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளன..

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பா விளிம்பில் எழுதியவர் ஈழத்து நிலவன்

🜏 ஐரோப்பா விளிம்பில் 🜏 ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ லிவிவ் முதல் வடக்கு அட்லாண்டிக் வரை: ஏவுகணைகள், எண்ணெய் கப்பல்கள் மற்றும் எரிசக்தி ஆயுதங்கள் மேற்கத்திய உலகை நேரடிப் போரின் வாசலுக்கு இட்டுச் செல்லும் விதம் ✦ லிவிவ் மீது தாக்குதல்: நேட்டோவின் வீட்டு வாசலில் ரஷ்யாவின் பாலிஸ்டிக் போர்முறை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளிலிருந்து வெறும் 40 மைல் தொலைவில் அமைந்துள்ள உக்ரைனின் மேற்குப் பகுதி தளவாட மையமான லிவிவ் மீது ரஷ்யா நடத்திய இரவு நேரத் தாக்குதல், இந்தப் போரின் இயல்பையே மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம், நேட்டோவின் கிழக்கு எல்லைக்கருகே சோதனை நிலையிலுள்ள நடுத்தரத் தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாஸ்கோ தயங்கவில்லை என்பதும் வெளிப்படையாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணை, RS-26 ரூபிஷ் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை வழங்கும் ஜூலி சங்

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக விமானங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த விமானங்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றதாகவும் டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த இந்த விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் விமானங்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டி இந்த 10 விமானங்களும் விமானப்படையின் திறனை அதிகரிப்பதோடு, விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவுமென தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்கவுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒலுவில் மீனவர் துறைமுகம்,கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒலுவில் மீனவர் துறைமுகம், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நிகழ்ந்துள்ள கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,பணிப்புரை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலே ஜனாதிபதி இவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வையும் கலந்துகொண்டிருந்தார்.இங்கு கருத்து தெரிவித்த அவர்; ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் உறுதிக் காணிகளில் அமைந்திருந்த தென்னந்தோட்டங்கள் கடலுக்குள் சென்றுள்ளன. இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை வரை…

மேலும் படிக்க