தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டு

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை  தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுந்தீவு – குறிகட்டுவான்  இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையிலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர். தனியார் படகொன்றே தற்போது பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.இதன்காரணமாக வழமையான அதன் மு.ப.11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப.11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர் களை நேரில் சென்று மதிப்பளித்தார் – ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை நேரில் சென்று மதிப்பளித்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்துள்ளார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று வாழ்துவதுடன், மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் – 3Aசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான இராஜேயஸ்வரன் யூலியானா, உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான மிராஜ் நிடா பாத்திமா, வணிகப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது

விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட குருக்கள் மட புதைகுழி : ஆதாரம் எதுவுமின்றி மூடப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில் நேற்று (02) தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உடல்களைத் தேடி, களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் நேரடி மேற்பார்வையில் கடந்த மார்ச் 30, 2026 அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் தற்செயலாக எலும்புகள் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு பாரிய புதைகுழி இருப்பதாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். மார்ச் 30 முதல் ஏப்ரல் 01 வரை மூன்று நாட்கள் அகழ்வுப்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று  (04)  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் கண்டறியப்பட்டதுடன், அவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது  முக்கியப் பொறுப்பாக இருப்பதால்  இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன்  வழிகாட்டலின்பேரில்  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி ஓரங்களில் கழிவுகள் வீதியால் செல்லமுடியாத துப்பாக்கிய நிலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.இதனை தடுக்கும் நடவடிக்கையாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதியோரங்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்ட போதும் புதுக்குடியிப்பு நகர்பகுதி மக்கள் வீட்டுக்கழிவுகளை குறித்த வீதிக்கருகில் தொடர்ச்சியாக கொட்டிவருகின்றார்கள் இதனால் இந்த வீதி ஊடாக பயணிக்கும் போது அதிக துர்நாற்றம் வீசுவதுடன் காட்டு மிருகங்களின் நடமாட்டங்களால் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வீதியால் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதிகளவான மக்கள் வாழ்ந்து வரும் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச  சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கழிவகற்றல்  நடவடிக்கை சரியான முறையில் இல்லை என…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேக நபர்கள் கல்பிட்டி யவில் கைது.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஏலக்காய் கடத்த முயன்ற 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர். கடந்த 31ஆம் திகதி கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 98 கி.கி ஏலக்காயை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, கல்பிட்டி கீரிமுந்தலம் கடற்பரப்பை உள்ளடக்கி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) ஆய்வு செய்யப்பட்டது, மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்பத்தெட்டு (98) கிலோகிராம் ஏலக்காய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஒரு டிங்கி படகுடன் 2 சந்தேகநபர்களை கடற்படையின் கைப்பற்றினர்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி தர்மபுரம் பகுதி யில் கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.தர்மபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாகச் சென்றமையால் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த மோட்டார் கிரைண்டர் ரக வாகனத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18  வயதுடைய  தியாகராசா விக்கினேஸ்வரன் மற்றும் 19 வயதுடைய ஜெரின் கனிஸ்ரன் ஆகிய இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதம்

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அனுமதிப் பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் கைது

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவிலான டீசலை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (02) மாலை மொல்லிப்பொத்தானை பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,430 லீற்றர் டீசல் மற்றும் 615 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 2,045 லீற்றர் டீசல் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் திருகோணமலை மற்றும் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 61 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள் மடம் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

குருக்கள்மடம் மனித புதைகுழியில் இடம்பெற்று வந்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மூன்று தினங்களாக இப்புதைகுழியில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்று ஆறடி ஆழம் வரை தோண்டப்பட்டது.இருந்தபோதும் மனித எச்சங்கள் எதையும் இதற்குள் காணக்கிடைக்கவில்லை. இதனால், இப்பணிகள் நேற்று முன்தினம் (01) கைவிடப்பட்டன.தோண்டப்பட்ட இடம் மண்ணிட்டு மூடப்பட்டது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட வேறு இடத்தில் பணிகளைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு கல்முனை வீதியால் பயணம் செய்திருந்த 170 முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இவ்விடத்தில் மூடப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க