தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன் படுத்தப்பட வேண்டும் ஆளுநர் நா.வேதநாயகன் 

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நான் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இன்று கரும்பு மீள்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, எமது வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ‘கரும்புத்தோட்டம்’ பகுதியில் பல தசாப்தங்களின் பின்னர் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (23.06.2026) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. ‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், விவசாயிகள், கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கரும்புச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் ‘நேச்சுரல் ரூட்ஸ்’ (Natural Roots) நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக இதனை ஏற்பாடு செய்திருந்தன. பல தசாப்தங்களாகக் கைவிடப்பட்டிருந்த கரும்புச் செய்கையை இப்பிரதேசத்தில் மீளவும் செழிக்கச் செய்யும் நோக்கில் இந்த ஆரம்ப நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பதவிநிலை சமாதான நீதிவான்களாகச் சத்தியப் பிரமாணம்!

வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், பதவிநிலை சமாதான நீதிவான்களாக இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஊர்காவற்றுறை நீதிமன்றக் கட்டடத்தில், ஊர்காவற்றுறை நீதவான் கௌரவ அனீபா ரஜீவ் முன்னிலையில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, நீதவான் முன்னிலையில் தத்தமது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கான சான்றுப்படுத்தல்கள், அவசர தேவைகள் மற்றும் பிரதேச மட்டத்திலான மக்கள் நலச் சேவைகளை இன்னும் விரிவாகவும், சட்டபூர்வ அதிகாரத்துடனும் முன்னெடுப்பதற்கு இந்த நியமனம் தங்களுக்குப் உறுதுணையாக அமையும் எனச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சபை உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி, ஏ – 9 பிரதான வீதியில் கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பலி!

கிளிநொச்சி, ஏ – 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு காணப்படுகின்றன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் இடப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் மேலும் 13 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வவுனியா மாநகர சபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதை களுடன் நுழைந்த உறுப்பினர்கள்

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் கடும் அமளிதுமளி: கறுப்பு சட்டை பதாதைகளுடன் நுழைந்த உறுப்பினர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று (22.06) இடம்பெற்ற வவுனியா மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடை உத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை நடவடிக்கை மீது விதிக்கப்பட்ட தடைஉத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்ப்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சபைக் கூட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு!

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத் தயாரிப்பதற்காக 33 நபர்களைக் கொண்ட ‘ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு’ தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் பொதுச் சபையின் இரண்டாவது கூட்டமானது யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லைத்தீவில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும்

‘டித்வா’ சூறாவளியினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்றையதினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இச்சூறாவளி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அவர்களுக்கான 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குதல் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுதல் என்பன இதன்போது இடம்பெற்றன. இதில் அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 499 ஆகும். அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், அனர்த்தத்தினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புப் பணிகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், தமக்கென ஒரு வீட்டை அமைத்து பாதுகாப்பாக வாழ்வதே இக்குடும்பங்களின் எதிர்பார்ப்பு எனவும், அதனை விரைவாக நிறைவேற்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அமைச்சர் சந்திர சேகர் அடியாள்கள் கூச்சலிட்டு கூட்ட த்தைக் குழப்பி னார்கள். கஜேந்திரன்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற குழப்பம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தரமுயர்த்துவது தொடர்பான விவகாரத்திலும், தையிட்டி விகாரை காணி விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கருத்துக்களை முன்வைத்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குழப்பமடைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை உரையாட விடாமல் தடுத்து தொடர்ச்சியாக குழப்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசினுடைய தேவையை நிறைவு செய்வதற்காகவே அர்ச்சுனா…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பாடகர் சத்தியன்

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களையும் இடங்களையும் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்ற சத்தியன், யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இதுவரை எலும்புக் கூடுகள் 405 அடையா ளம் காணப்பட்டன!

தலைப்பு: செம்மணி மனித புதைகுழி அகழ்வு: 30ஆம் நாளில் மேலும் 7 எலும்புக்கூடுகள் மீட்பு; இதுவரை 405 அடையாளம் காணப்பட்டன!  செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆம் நாள் பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட நிபுணர்கள் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன. நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட இந்த எலும்புக்கூடுகளில், இதுவரை 377 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலதிக தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனைகளுக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இன்னும் பல…

மேலும் படிக்க