இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் 16 ஆம் திகதி வெப்பச் சுட்டியானது மனித உடலில் உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில், காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது. அதிக வெப்பமான சந்தர்ப்பங்களில் அதிகளவு நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் சிறுவர்கள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

போதைப்பொருள் அற்ற தேசம் அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:- நேற்று ஒரே நாளில் மாத்திரம் 965 சுற்றிவளைப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 510 கிராம் ஹெரோயின், 788 கிராம் ஐஸ், 70 கிலோகிராம் 264…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவில் சமூக அமைப்பு

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன. “வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான வாதம் அல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தற்போது சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசு தனது சொந்தப் பிரேரணையாக ஏற்றுக்கொண்டால், மிகக் குறுகிய காலத்தில் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் குழுக்களை நியமித்து காலத்தைக் கடத்துவது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் மீண்டும் (QR Code) முறைமை! அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க!

இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோதே, இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.மேலும், சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாகும். தனது அரசின் கீழ் அந்த களஞ்சியங்களுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதேநேரத்தில், அரசாங்கத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அரிசி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் புதுக்கடை நீதவான் நீதிமன்றம்

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்ட கடற்படையினர், அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களையும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ ‘ஐஸ்’ (மொத்தம் 654 கிலோ).8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை, இடியுடன் மழை!

இன்றையதினம் (14) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.

இலங்கையின் தெற்கே கடலில் ‘IRIS DENA’ கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் நேற்று இரவு 09.29 மணிக்கு (13) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறத இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த மாலுமிகளின் உடல்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.கடந்த 4 ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் சுமார் 180 பேருடன் ஒரு ஈரானிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.அதனைதொடர்ந்து, சுமார் 84 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு டார்பிடோவைப் பயன்படுத்தி சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யா விடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வது குறித்து விரிவாகக் கலந்துரை யாடல்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுக்கும் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. ​மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தீர்வாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. ​அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவருடன் வெளிநாட்டு விவகார அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். ​இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்குத் தூதுவர் இணக்கம் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். ​இலங்கைக்குத் தேவையான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப் பட்டுள்ளார்.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க