இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹிங்கு ரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஒருவர் கைது

ஹிங்குரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் ஒரு கைக்குண்டு , பல்வேறு வகையான வெடிபொருட்கள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் 36 பயிற்சி தோட்டாக்கள் பல சீருடைகள் , நான்கு கெமா தொப்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்தனர். ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ உபகரணங்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

எரிவாயு விநியோக த்தை. – உடனடியாக QR முறையை அறி முகப் படுத்துமாறு கோரிக்கை

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது?  என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார். தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி அநியாயமான முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது. ஏன் இந்த அறிவிப்புகளை நள்ளிரவில் விடுக்க வேண்டும்? பகல் 10 மணிக்கு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்க முடியாதா? நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள்.

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள். இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து, 1000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள் போதைப்பொருட்களுடன் மாத்திரமன்றி, சட்டவிரோத ஆயுதங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 08 பிஸ்டல்கள் 02 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள் 01 எம்-16 (M16) ரக நவீன துப்பாக்கி அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசின்கள் (Magazines) கைது நடவடிக்கையும் விசாரணையும் இந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஜனாதிபதி மின்சார சபையின் பொறியி யலாளர் தொழிற் சங்கப் பிரதிநிதி களுக்கிடையி லான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டிய, ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். இது ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரி பொருள் கையிருப்பை உறுதி டி.ஏ. ராஜகருணா

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 – 15: முதலாவது கப்பலும் ஏப்ரல் 17 – 18: இரண்டாவது கப்பலும் ஏப்ரல் 21 – 22: மூன்றாவது கப்பலும் ஏப்ரல் 29 – 30: நான்காவது கப்பலும் நாட்டுக்கு வந்தடையவுள்ளது. குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக் க்ஷவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் (17) செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு முன்னெடுக்கும்விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் பெப்ரவரில் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தாம்,சிங்கப்பூரிலிருப்பதாக கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.இதையடுத்தே இம்மாதம் 17 ஆம் திகதி ஆஜராகும்படி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் கைது

இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அரச புலனாய்வு துறை அதிகாரிகளினால் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகளினால்நேற்று (10) ஹிங்குரன்கொட பொலிஸ் பிரிவின் கிம்புலாவள பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு,தோட்டாக்களை அதிரடிப்படையினர் செய்யப்பட்டவர் 46 வயதுடைய ஹிங்குரன்கொட,கிம்புலாவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிரடிப்படையினர் சந்தேகநபரை ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹிங்குரன்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி எல்லேபொள தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் ஹிங்குரன்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார சபை தொழிற் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை களுக்கு இணக்கம் தலைவர் நுசித் குமாரதுங்க

மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். எஞ்சிய இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் பெரும்பாலானவை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதே சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதில் 59 கோரிக்கைகளுக்கு முதற்கட்டக் கலந்துரையாடலின் போதே பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் 5 கோரிக்கைகள் எஞ்சியிருந்ததுடன், அவை குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார ஆறுதல் செய்தி.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு முக்கியமான ஆறுதல் செய்தியை வழங்கியுள்ளார். கொழும்பில் நேற்று  நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவினாலும், இலங்கை அரசு முன்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கையிருப்பு இலங்கையிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தட்டுப்பாடின்றி விநியோகத்தைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தற்போதைய சர்வதேச பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.”நாட்டின் வளங்களை நாம்…

மேலும் படிக்க