இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் மீண்டும் (QR Code) முறைமை! அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க!

இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோதே, இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.மேலும், சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாகும். தனது அரசின் கீழ் அந்த களஞ்சியங்களுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதேநேரத்தில், அரசாங்கத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அரிசி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் புதுக்கடை நீதவான் நீதிமன்றம்

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்ட கடற்படையினர், அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களையும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ ‘ஐஸ்’ (மொத்தம் 654 கிலோ).8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இரணவில, மஹவெவ, நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை, இடியுடன் மழை!

இன்றையதினம் (14) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.

இலங்கையின் தெற்கே கடலில் ‘IRIS DENA’ கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் நேற்று இரவு 09.29 மணிக்கு (13) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறத இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த மாலுமிகளின் உடல்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.கடந்த 4 ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் சுமார் 180 பேருடன் ஒரு ஈரானிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.அதனைதொடர்ந்து, சுமார் 84 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு டார்பிடோவைப் பயன்படுத்தி சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யா விடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வது குறித்து விரிவாகக் கலந்துரை யாடல்

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுக்கும் (Levan S. Dzhagaryan), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. ​மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தீர்வாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. ​அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யத் தூதுவருடன் வெளிநாட்டு விவகார அமைச்சர் விரிவாகக் கலந்துரையாடினார். ​இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்குத் தூதுவர் இணக்கம் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். ​இலங்கைக்குத் தேவையான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப் பட்டுள்ளார்.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஹிங்கு ரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஒருவர் கைது

ஹிங்குரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் ஒரு கைக்குண்டு , பல்வேறு வகையான வெடிபொருட்கள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் 36 பயிற்சி தோட்டாக்கள் பல சீருடைகள் , நான்கு கெமா தொப்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்தனர். ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ உபகரணங்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

எரிவாயு விநியோக த்தை. – உடனடியாக QR முறையை அறி முகப் படுத்துமாறு கோரிக்கை

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது?  என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார். தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி அநியாயமான முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது. ஏன் இந்த அறிவிப்புகளை நள்ளிரவில் விடுக்க வேண்டும்? பகல் 10 மணிக்கு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்க முடியாதா? நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள்.

தென்னிலங்கையில் மீட்கப்பட்ட 1000ம் கோடி பெறுமதியான போதைப்பொருள். இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து, 1000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள் போதைப்பொருட்களுடன் மாத்திரமன்றி, சட்டவிரோத ஆயுதங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 08 பிஸ்டல்கள் 02 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள் 01 எம்-16 (M16) ரக நவீன துப்பாக்கி அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மகசின்கள் (Magazines) கைது நடவடிக்கையும் விசாரணையும் இந்த…

மேலும் படிக்க