இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சட்ட விரோதமான “குஷ்” போதைப் பொருளை இலங்கை க்கு கடத்தி இந்தியர் கைது

சட்டவிரோதமான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்து, அதனை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்தியர் ஒருவர் இன்று (09) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருள் சுமார் ரூ. 2 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டடுள்ளதகைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இன்று (09) அதிகாலை 12.10 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ‘எயார் ஏசியா’ (AirAsia) நிறுவனத்திற்கு சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.சந்தேகநபர் கொண்டு வந்த 2 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அதில் 6 பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 762 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பெண்ணிடம் சங்கிலி அறுத்துச்சென்ற இளைஞர் காவல்துறையில் ஓப்படைப்பு;

கோடெல்லா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண், தனது வீட்டிலிருந்து தம்பரவில கூட்டுறவு சங்கத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது  மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அவரது தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார். பெண்ணின்  அலறல் சத்தம் கேட்டு, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சந்தேக நபரைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் 29 வயதுடையவர். வென்னப்புவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட திருடப்பட்ட நெக்லஸின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. “இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் சமூகப் பொறுப்புள்ள குடிமகனாக, சந்தேக நபரைப் பிடித்த இளைஞரின் உடனடி நடவடிக்கைக்காகவும், ஒரு குற்றத்தைத் தடுத்து, சந்தேக நபர் தப்பிக்க விடாமல் செய்ததற்காகவும் நாங்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை மின்சார சபைக்கு பதிலாக ஆறு அரச நிறுவனங் கள் உருவாக்கம்

இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும். 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய விதிகள் இதன் மூலம் இன்று (9) முதல் நடைமுறைக்கு வருகின்றன.விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.இந்த மறுசீரமைப்பு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வன்முறை கும்பலால் வீடு, தீக்கிரை.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், வீடொன்றின் மீது பெற்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர்களுக்கும், வெளியில் இருந்து வந்த வன்முறைக் கும்பல் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு பாரிய மோதலாக மாறியுள்ளது. வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் வந்த அந்தக் கும்பல், இளைஞர்களைத் தாக்கும் நோக்குடன் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர்கள் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல், வீட்டின் ஜன்னல்களை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், கதவின் வழியாகப் பெற்ரோல் ஊற்றித் தீயிட்டுள்ளனர். வீட்டிற்குள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருந்த நிலையில், அவர்கள் கதறி அழுது தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளனர். இருப்பினும், வன்முறையாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தீவைத்துக் கொழுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டிற்குள் தீ பரவத் தொடங்கிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரானின் போர்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழப்பு

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்  தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இராணுவத்தி னரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர் ப்புப் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினம் எமக்குத் துக்க தினம்; இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்! இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் எனக் கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று (8) மாபெரும் கவனயீர்ப்பு.போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது ஒன்பது ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று மகளிர் தினம் எமக்கு துக்க தினம் என தெரிவித்து தமக்கு சர்வதேச விசாரணையே தீர்வு எனக் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என இதுவரை இலங்கை அரசாங்கத்தால் எந்த தகவலும் வெளியிடவில்லை எனவும் இனப்படுகொலையாளிகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோலை காவல் துறையினர். மீட்டுள்ளனர்

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோலை கல்முனை தலைமையக காவல் துறையினர். மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக  காவல் துறை.பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான காவல் துறையினர். சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  சுமார் 32 லீட்டர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண்  சந்தேக நபர்  கைதான நிலையில் காவல் துறையினர். பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.மேலும்  குறித்த வழக்கு நாளை  கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழின படுகொலை யைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபி மானி வேடம் தரித்து நடிப்பதா? ரவிகரன் எம்.பி

தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழினப்படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடந்தரித்து தமது உலகமகா நடிப்புத்திறன்களை வெளிப்படுத்திவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் 08.03 2026இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளது. பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது. தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக்கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது. அவ்வாறு…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் ஈரானின்! மறுத்துள்ளஅமெரிக்க.

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் ஒரு முறையான இராணுவ இலக்கு (Legitimate Military Target) என்றும் அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு எனவும் அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்துள்ளது. இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் கீழ், ஈரானிய இராணுவச் சொத்துக்கள் அனைத்தும் இலக்கு வைக்கப்படுவதாக அமெரிக்கா முன்னரே எச்சரித்திருந்தது. சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் போர்க்கப்பல்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

குவைத்தில் அமைந்து ள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான் மீது. குறிவைத்து தாக்குதல்

குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான்’ (Arifjan) தலைமையகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய தாக்குதலானது “உண்மை வாக்குறுதி” நடவடிக்கையின் 27 ஆவது அலை என ஈரான் இராணுவம் பெயரிட்டுள்ளது.இதேவேளை குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த…

மேலும் படிக்க