இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் முதன்மைப் பணவீக்க மதிப்பு, ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. இது மார்ச் மாதப் பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை சற்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவற்ற பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் வரை மிகக் கடுமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் தேசிய பணவீக்கம் இந்த அளவுக்குத் திடீரென உயர்வடைவதற்கு, உணவற்ற பிரிவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை; நீதிமன்றில் வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சடுதியாக விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது: அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.10 நாட்களுக்கு முன்னர் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், இன்று 200 ரூபாவை நெருங்கியுள்ளது. அதேநேரம், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், வெள்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் போராட்டம்!

வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது பாடசாலை மாணவன் பலி

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு (19) இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று , மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விளகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு  வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம்  வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம்  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,  பிரதி அமைச்சருமான உபாலி   சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள்,  திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த   ஈவு    வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இன்று முற்பகல் 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால், உடனடியாக செயற்படுவதற்கு ஹெலிகாப்டர்களும் படையினரும் தயாராக இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.அதேவேளை, நேற்று பிற்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டும், எதிரிகளாக அல்ல”; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் இன்று (14) ஆரம்பமானது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைக்காக பெருமளவிலான ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் தற்போது பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். “ஒரு நிலையான இருதரப்பு உறவு உலகிற்கு நல்லது,” என்று குறிப்பிட்ட அவர், “நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிகளாக அல்ல,” என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். “நாம் இணைந்து ஒரு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை.

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.  குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில். முள்ளிவாய்க் கால் இனப்படு கொலை யின் 17வது ஆண்டு நினைவேந்தல்

தமிழினத்தின் வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்றைய தினம் 12.05.2026 செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ​​இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டு நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவேந்தல்​நிகழ்வின் தொடக்கத்தில், உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூறும் முகமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச் சுடர்களும் ஏற்றப்பட்டன.தொடர்ந்து இறுதிப் போரின் போது மக்கள் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்கவும், உயிர் வாழவும் ஆதாரமாக விளங்கிய வரலாற்றுச் சுவடுமிக்க ‘உப்பில்லா கஞ்சி’ பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

மேலும் படிக்க