யாழ். நிகழ்வில் அமைச்சரிடம் பெண் சரமாரி கேள்வி
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நடைபெற்ற பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில், அங்கு கலந்துகொண்ட பெண் ஒருவர் தனது பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றியதால் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சமூக ஒழுக்க விழுமியங்கள், பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட நேரம் உரைகள் இடம்பெற்றன. இந்நிலையில், நிகழ்வு நிறைவடையும் வேளையில் நன்றி உரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சங்கானை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் எழுந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “பெண்களுடன் கலந்துரையாடல்…
மேலும் படிக்க