தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். நிகழ்வில் அமைச்சரிடம் பெண் சரமாரி கேள்வி

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நடைபெற்ற பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில், அங்கு கலந்துகொண்ட பெண் ஒருவர் தனது பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றியதால் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சமூக ஒழுக்க விழுமியங்கள், பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட நேரம் உரைகள் இடம்பெற்றன. இந்நிலையில், நிகழ்வு நிறைவடையும் வேளையில் நன்றி உரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சங்கானை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் எழுந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “பெண்களுடன் கலந்துரையாடல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தி யங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 8 டிங்கிகள், 2 கெனோக்கள், 4 டிராக்டர்கள் ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனஇவை தவிர, கடலட்டைகள், வணிக ரீதியான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக சட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வடமேல் மாகாணங்களில். இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

2025ஆம் ஆண்டுக்கான அதிபர் சேவையின் தரம் III இற்கு போட்டிப் பரீட்சை

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இப்பரீட்சை ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனைத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்!

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நாளையுடன் (04ஆம் திகதி) நிறைவடைவதால், அந்த வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, எதிர்மனுதாரர்கள் குறிப்பிடப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் கோரிய நிலையில், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டது. மன்னார் நகர சபைத் தவிசாளரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் இன்றைய அமர்வில், எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார். இதன்போது மன்றுக்கு விடயங்களைத் தெளிவுபடுத்திய அரச சட்டவாதி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் ‘நகர சபை’ என்பதற்குப் பதிலாக ‘மாநகர சபை’ எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

கோயம்பேடு கேளிக்கை விடுதி தகராறு; யான்சியைத் தொடர்ந்து சிறுமியும் உயிரிழப்பு

சென்னை – கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது திட்டமிட்டு காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக இந்த கொடூர சம்பவத்தில் ‘யான்சி’ என்ற 18 வயது இலங்கை அகதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (18) என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் சந்திப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில்.திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்தியமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞர் பலி.

வவுனியா, கனகராயன்குளம்  காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருசுட்டுக்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்றில் மோதி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதா    காவல் துறையினர்.தெரிவித்துள்ளனர். நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த விபத்து குறித்து கனகராயன்குளம்  காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவ்விபத்தில் குருசுட்டுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர் குருசுட்டுக்குளம் கோயிலுக்குச் சொந்தமான காணியைச் சுத்தப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தை இயக்க முற்பட்டபோது, அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அந்த உழவு இயந்திரத்தைத் திருத்திக் கொண்டிருந்தபோது, அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதன்போதே அவர் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டீசல் விலை உயர்வு.பேருந்து சங்கங்கள் இன்று அவசரக் கூட்டம்

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்தாதது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக, பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேருந்து சேவைகளைத் தொடர்வது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். அனைத்து பேருந்து சங்கப் பிரதிநிதிகளும் இன்று காலை ஒன்றுகூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று எங்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சங்கப் பிரதிநிதிகள் வரவுள்ளனர். குறிப்பாக, இந்த எரிபொருள் சிக்கலில் இருந்து எமது தொழிலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து கலந்துரையாடவுள்ளோம். அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அவர்கள் ஒரு கொள்கையில் உள்ளனர். எவ்வாறாயினும், தற்போது இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நடுகை!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “வளமான நாடு அழகான வாழ்க்கை” சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (02) இடம்பெற்றிருந்தது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ்விழாவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அரச அதிகாரிகள் மற்றும் கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த நெல்…

மேலும் படிக்க