இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

இன்று (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடபகுதி கடற் பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு களைக் கட்டுப்படுத்துக – ரவிகரன்

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 10.06.2026இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குமாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமெற் வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற தீய செயல்களால் வடபகுதிக் கடல்வளம் முற்றாக அழிந்துபோகின்றது. இத்தகைய சட்டவிரோத தொழில்களைத்  தடுக்கவேண்டிய கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையோ செயலற்றவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கேட்டால், ஆளணிப்பற்றாக்குறை இருப்பதாகவும்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

சங்கீத்ஷனை விடுவிக்கா விட்டால் வடக்கு, கிழக்கு போராட்டங்கள் வெடிக்கும் சிறீதரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்காவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வெடிக்குமென, தமிழரசுக்கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம்பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நாட்டில் ஒரு பாடல் பாடியதற்காக,ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்கின்ற ஒரு கலைஞன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாட்டில் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம்

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான்  கைது செய்யப்பட்டார்.  பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது  என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாலை சோதனை தீவிரம்!

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை  இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கல்முனை காரைதீவு நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதுடன்  குறிப்பாக அதிகாலை வேளைகளில்  நெடுந்தூர சேவையில் கொழும்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற  பேருந்துகளும் பயணிகளும் இதன்போது   சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி – மடக்கிப்பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி  காவல் துறை பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அழிவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சருகு புலி, அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடி கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கிராம மக்கள் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினருடன் இணைந்து.மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சருகு புலி பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற  உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன்

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அருகில் இருந்த உப்புமால் வீதி தற்போது பயன்படுத்தப்படாது மூடப்பட்டுக் காணப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏதேனும் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு தேவையான ஒரு வீதியாகவும் அந்த வீதி காணப்படுகின்றது. எனவே மூடப்பட்டுள்ள அவ்வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக விடுமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது முல்லைத்தீவுமாவட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன்

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர்  திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இதில் சட்டமா அதிபரினாலேயே பரிந்துரைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை இரத்து செய்து 1988 சட்டத்தின் கீழ் இருந்த முந்தைய தேர்தல் முறைக்கு திரும்புதல் மூலம் மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வழி செய்து உள்ளது. இருப்பினும் அந்த பரிந்துரையை கருத்தில் கொள்ளாது அரசரப்பு புதிய திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் பெண்களுக்கு இளைஞர்களுக்கும் அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய  திருத்தச்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். நிகழ்வில் அமைச்சரிடம் பெண் சரமாரி கேள்வி

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நடைபெற்ற பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில், அங்கு கலந்துகொண்ட பெண் ஒருவர் தனது பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றியதால் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சமூக ஒழுக்க விழுமியங்கள், பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட நேரம் உரைகள் இடம்பெற்றன. இந்நிலையில், நிகழ்வு நிறைவடையும் வேளையில் நன்றி உரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சங்கானை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் எழுந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “பெண்களுடன் கலந்துரையாடல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தி யங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 8 டிங்கிகள், 2 கெனோக்கள், 4 டிராக்டர்கள் ஆகியவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனஇவை தவிர, கடலட்டைகள், வணிக ரீதியான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை பனிச்சங்கேனி, சோபா தீவு, பொல்மல்குடா, கின்னியா, சூடைக்குடா, ஒட்டமாவடி, ஆலம்பில், புதுவக்காடு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிகுளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக சட்ட…

மேலும் படிக்க