நெடுந்தீவு குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரிக்கை
நெடுந்தீவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் (RO Plant) திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் RO Plant திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 80,000 லிட்டருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு, சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், நெடுந்தீவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், தற்போதைய நீர் உற்பத்தி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் அரச…
மேலும் படிக்க