உலக செய்திகள் செய்திகள் 

மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்ததை பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கண்டிப்பதாக’ அந்நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு இணைப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளின் விரிவாக்கத்தையும் தெளிவாக எதிர்க்கிறோம் என்பதை நாம் நினைவுகூர்கிறோம்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய குடியேற்றங்கள் தொடர்பிலான அறிவிப்பை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். பலஸ்தீன நாடு ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! வேல்முருகன்

ஒன்றிய அரசே! இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாத அராஜகத்தை வேடிக்கைப் பார்க்காதே! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்தியப் பெருநிலத்தில் வாழும் எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடு!தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களைத் திட்டமிட்டு அபகரித்து,புத்த பிக்குகள் மூலமாகத் தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகள் அமைக்கும் இலங்கை அரசின் சிங்களப் பௌத்த மதவாதத் தமிழர் விரோத அரசியல் போக்கைத்தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சொந்த நிலத்தையும்,சொந்த வீட்டையும்,தாம் வழிபட்ட ஆலயத்தையும் காக்கும் நோக்கில் போராடிய, அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கும் இலங்கை அரசு, அதே நேரத்தில் தமிழர் நில அபகரிப்பில் முன்னின்று செயல்பட்ட பிக்குவுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து விருது வழங்கி விழா நடத்துவது இலங்கையில் நிலவும் “ஜனநாயகத்தின் மீதானத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முன்னாள் போராளி வைதேகி நேற்றைய தினம் 23.12.2025 சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் தேசவிடுதலைக்காக பல களங்கள் பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்த மகளிர் போராளி வைதேகி 23.12.2025 இன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.அவருக்கு எமது இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விசேட கவனம் அமைச்சர் ஆனந்த விஜேபால

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் விசேட கவனம் செலுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுமென்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் சிறப்பு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அம்மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாகவும் நிவாரணப்பணிகள் தொடர்பாகவும் குளங்கள், வீதிகள் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் இரு பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

முடக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து ஐ.நா. கவலை   காசாவில் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபடும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பல இடங்களிலும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. காசா நகரின் கிழக்கு மற்றும் துபா பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று (23) குண்டுகளை வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸின் கிழக்கு பகுதி மற்றும் டெயிர் அல் பலாஹ்விலும் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.   போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தீவிரமாகவும் திட்டமிட்ட வகையிலும் மீறுவதாக கண்டித்த காசா அரச ஊடக அலுவலகம், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அதனை இஸ்ரேல் 875 தடவைகள் மீறி இருப்பதாக சுட்டிக்காட்டியது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழ் தே. ம. மு. கோரிக்கை க்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை

ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஈரோடு வே.பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சிங்களவர்களுக்கு கொக்குத் தொடுவாயில் காணிவழங்க இடமளிக்க முடியாது; ரவிகரன் எம்.பி

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிவழங்க இடமளிக்க முடியாது; கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்புத் தொடர்பிலான விசேடகலந்துரையாடல் 22.12.2025நேற்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை; சீனத் தூதுக்குழுவும் இன்று வருகை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரண உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதோடு, இன்று மதியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். ​தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இரவு இலங்கையிலிருந்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு : குடும்பம் மீது தாக்குதல்

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக்குழு அட்டகாசம்: கைக்குழந்தையுடன் இருந்த குடும்பம் மீது தாக்குதல் முயற்சி! யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (21) இரவு புகுந்தல் வன்முறைக்குழு ஒன்று, வீடுகளைச் சேதப்படுத்தியும் வாகனங்களை அடித்து நொருக்கியும் பாரிய அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் திரண்டு வந்த வன்முறைக்குழுவினர், கட்டைக்காடு கிழக்கிலுள்ள வீடு ஒன்றின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றுள்ளனர். அந்த வீட்டில் கைக்குழந்தைகளுடன் ஒரு குடும்பம் தங்கியிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறையின் போது வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த உழவு இயந்திரம் மற்றும் வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. குறித்த வன்முறைக்குழுவினர் மதுபோதையில் நீண்டகாலமாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்…

மேலும் படிக்க