இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக மயூர நெத்திகுமாரகே!

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.இந்த கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன்  பெட்ரோல்  மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல்  இருப்பதாகவும் அவர் கூறினார்.இவற்றை இறக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கேள்வி மனுக்கு அமைவாக ஏனைய அனைத்து எரிபொருள் கப்பல்களும் படிப்படியாக நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண மோசடி குற்றங்க ளுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணை

மன்னாரில் பண மோசடி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக  கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை நேற்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த பெண்ணை தலா 20 மில்லியன் பெறுமதியான இரு சரித பிணையில் செல்ல மன்னார் நீதவான் உத்தரவிட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துவதற்கு உதவியதாக கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் கொண்டு ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுள்ள தங்க நகைகள் வாங்கியுள்ளதாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

எரிபொருள் தட்டுப் பாடு காரணமாக வைத்திய சாலைக் கட்டமைப்பைப் பராமரிப் பதில் கடும் சவால்கள்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரிப்பதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக GMOA தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாளை (மார்ச் 17) நாடளாவிய ரீதியிலான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த GMOA தீர்மானித்துள்ளது. இதன்போது ஆரம்ப சுகாதார சேவை குறித்த விசேட அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வைத்தியர்களின் கோரிக்கை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தனியார் பேருந்து சேவைக்கு 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, தனியார் பேருந்து சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக வாராந்த அடிப்படையில் 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் (Kilometers) அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த நடைமுறை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை, தனியார் பேருந்துகள் தமக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த முடிவுக்குப் பதில் அளித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, டிப்போக்கள் ஊடாக மாத்திரம் எரிபொருள் வழங்கும் நடைமுறை பாரிய…

மேலும் படிக்க