உலக அரசியல். கட்டுரை பொதுவான செய்திகள் 

பிரியான்ஸ்க் ஏவுகணைத் தாக்குதல்: புதிய மோதலின் விளிம்பில் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் பிரியான்ஸ்க் ஏவுகணைத் தாக்குதல்: புதிய மோதலின் விளிம்பில் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ✦ ரஷ்யா–உக்ரைன் போரின் விரிவடைதலும் மேற்கத்திய நாடுகளின் மறைமுக நேரடி தலையீடும் – ஒரு ஆழமான மூலோபாயப் பகுப்பாய்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦ ஐரோப்பிய போரில் ஒரு புதிய வெடிப்புப் புள்ளி 2026 மார்ச் 10 அன்று ரஷ்யாவின் எல்லை நகரமான Bryansk (பிரியான்ஸ்க்) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யா–உக்ரைன் போர் ஒரு ஆபத்தான புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் பிரான்ஸ் (France) ஆகிய நாடுகளுக்கிடையில் கடுமையான இராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவில் சமூக அமைப்பு

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன. “வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான வாதம் அல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தற்போது சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசு தனது சொந்தப் பிரேரணையாக ஏற்றுக்கொண்டால், மிகக் குறுகிய காலத்தில் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் குழுக்களை நியமித்து காலத்தைக் கடத்துவது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் மீண்டும் (QR Code) முறைமை! அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்ப்பாண த்தில் சட்டவிரோத பொருட்க ளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த மூவரும் நேற்றையதினம் (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.போதைப்பொருளுடன் கைதான இருவரில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லிகிராம் ஐஸும், மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம் ஐஸும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க