சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சிங்களவர்களுக்கு கொக்குத் தொடுவாயில் காணிவழங்க இடமளிக்க முடியாது; ரவிகரன் எம்.பி

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிவழங்க இடமளிக்க முடியாது; கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்புத் தொடர்பிலான விசேடகலந்துரையாடல் 22.12.2025நேற்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு : குடும்பம் மீது தாக்குதல்

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக்குழு அட்டகாசம்: கைக்குழந்தையுடன் இருந்த குடும்பம் மீது தாக்குதல் முயற்சி! யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (21) இரவு புகுந்தல் வன்முறைக்குழு ஒன்று, வீடுகளைச் சேதப்படுத்தியும் வாகனங்களை அடித்து நொருக்கியும் பாரிய அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் திரண்டு வந்த வன்முறைக்குழுவினர், கட்டைக்காடு கிழக்கிலுள்ள வீடு ஒன்றின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றுள்ளனர். அந்த வீட்டில் கைக்குழந்தைகளுடன் ஒரு குடும்பம் தங்கியிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறையின் போது வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த உழவு இயந்திரம் மற்றும் வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. குறித்த வன்முறைக்குழுவினர் மதுபோதையில் நீண்டகாலமாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ் , புத்தூர் பகுதியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த 2 இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , புத்தூர் பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வீதி வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய , புத்தூர் பகுதியை சேர்ந்த 25…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

திருகோணமலை -சேருநுவர பகுதியில் மகிழுந்து விபத்து

திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு திருகோணமலை திரும்பியோர் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளானது மட்டக்களப்பில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு திருகோணமலை திரும்பியோர் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளானது திருகோணமலை -சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் வைத்து மகிழுந்து  ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் மகிழுந்தில் பயணித்தோர் காயங்களான்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்புக்கு திருமண வீட்டுக்குச் சென்று திருகோணமலை நோக்கிவரும்போது தூக்க களக்கத்தினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக காவல்துறைதுறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வேலன் சுவாமிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்

தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார் சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தின்போது மதகுரு எனவும் பாராது வேலன் சுவாமிகள் வலுக்கட்டாயமாக  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். நேற்று மதியம் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி  காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டிருந்தவேளை வேலன் சுவாமிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

ஈழத்தமிழர்கள் அனைவரின் விருப்பம் அறிந்து செயலாற்றுக ஸ்டாலின் அவர்களுக்கு பழ நெடுமாறன் வேண்டுகோள்

பெரும் தியாகம் புரிந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரின் விருப்பம் அறிந்து செயலாற்றுக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் வேண்டுகோள்

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

பாதைச் சேவையில் பணியாற்றும் அதிகாரசபை பணியாளர் இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு!

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்பாதையில் பயணித்த மூவரிடம் பணம் பெற்றுக்கொண்ட போது சமூக செயற்பாட்டாளர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம்   காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்பாதையில் பயணித்த மூவரிடம் பணம் பெற்றுக்கொண்ட போது சமூக செயற்பாட்டாளர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் குறித்த நபரை எச்சரிக்கை செய்ததையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர் பணத்தை திருப்பிக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கடற்பாதைச் சேவையானது அரச நிதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இயக்கப்படும் இலவச சேவையாகும். எனினும் இப்பாதையில் ஏற்றிச் செல்லப்படும் வாகன சாரதிகளிடம் பணியாளர்கள் அவ்வப்போது நிதி வசூலிப்பதாக சாரதிகள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி

யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி – பொம்மைவெளி பகுதியில் சம்பவம்! யாழில் பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம் (20. 12. 2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி;

தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி; பாதிப்புக்களை சீர்செய்ய அரசின் 2026பாதீடு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை காணொளி https://www.facebook.com/reel/839573708867890 தித்வா புயலினால் முல்லைத்தீவு, வுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார். அதேவேளை மிகவும் கடுமையாக தித்வாபுயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் குளச்சேதங்களுக்கான நிரந்தரத்தீர்வு, பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு, கைவிடப்பட்ட குளங்களை பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல், வெள்ளத்தால் தனிமைப்படுத்தபடும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு, விவசாய வீதிகள் சீரமைப்பு, வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம், நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அரசின் 2026 பாதீடு வாய்ப்பளிக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 19.12.2025இன்று இடம்பெற்ற திடீர்…

மேலும் படிக்க
காணொளி தாயகச் செய்தி 

என் பி பி நூதனமாக மற்றுமொரு இன அழிப்பை செய்ய முயற்சிக்கின்றது, சிறீதரன்

என் பி பி நூதனமாக மற்றுமொரு இன அழிப்பை செய்ய முயற்சிக்கின்றது, இந்த நாட்டில் நடப்பது அரசாங்கமா? அல்லது NPP இன் அராஜகமா? – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

மேலும் படிக்க