இலங்கை செய்தி. செய்திகள் 

கிவுல் ஓயா திட்டத்தில் குடியேற்றங்கள் நிறுவப்படாது

வெளிமாவட்டங்களிலிருந்து புதிய குடியேற்றங்களை அமைக்கும் திட்டம் கிவுல் ஓயா திட்டத்தில் இல்லையென்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவரென்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ , மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.துரதிஷ்டவசமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்நகர்த்த முடியாதிருந்தது.கொழும்பிலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வதாலேயே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் எழுந்துள்ளன. நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி 1983ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மக்கள் மத்தியில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்

வடக்கு மற்றும் கிழக்கு உலக வங்கியின் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2026 முதல் 2031 வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் சுற்றுலா, மீன்பிடித் துறை மேம்பாடு மற்றும் தனியார் முதலீடுகளைக் கவருதல் ஊடாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வருமானத்தை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்!

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், வரி முறையை வலுப்படுத்தவும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025.05.19 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த புதிய சட்டமூலத்தை விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடவும், பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை.மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட  விசேட  செய்தியிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது.  சட்டத்தை  சமமாகவும் நீதியுடனும் கடைப்பிடிக்கும்  சமூகமே  உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது  பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது.  உண்மையான சுதந்திரமென்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல. அது நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க இதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன், அதற்கான கால அவகாசம் தொடர்பிலும் தெரிவித்தார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் விளக்கமறியலில்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகள் மற்றும் மேலும் 6 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பெந்தோட்டை பகுதியில் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

அளுத்கம, பெந்தோட்டை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 5.105 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் தெரு மதிப்பு ரூ. 7 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

முறையற்ற வகையில் வெளிநாடு சென்றவர்கள் இடையூறுகளின்றி நாடு திரும்ப அனுமதி.ஆனந்த விஜேபால

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் எந்தவித இடையூறுகளும் இன்றி நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதற்கு வசதியாக தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை அகதிகளுக்கான ஐக்கிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது

கரையோர காவல்துறை பிரிவின் ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. அதன்படி, இத்துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளால் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

புதிய அரசியலமைப்பு : சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால்அநுரவிடம் முக்கிய கோரிக்கை!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு சீர்திருத்த உரையாடலுக்கான இயக்கத்தினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ளல் அத்தியாவசியமான ஒரு முன்தேவை என்பதையும் தமது இயக்கம் உறுதியாக நம்புவதாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளல் இலங்கைக்கு ஒரு முக்கியமான சவால் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த முயற்சியில், அனைவரையும் உள்ளடக்கி, அனைவரினதும் பங்கேற்பை உறுதிசெய்யும் சீர்திருத்தச் செயல்முறையை உறுதி செய்வதும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின்…

மேலும் படிக்க