இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேரும் வெலிசறையிலுள்ள கடற்படை முகாமில்!

இந்தியக் கடற்படையால், பெப்ரவரி 15 – 25 ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்குபற்றிய ஈரான் கடற்படை கப்பல்களில் ஒன்றான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கியது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது. எவ்வாறிருப்பினும் இலங்கையின் கடல் சார் வர்த்தக பாதிப்புக்களைக் கருத்தில்கொண்டு அக்கப்பலுள்ளவர்கள் மீட்டு, பின்னர் அதனை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசு அனுமதியளித்தது. அதற்கமைய அந்தக் கப்பலிலிருந்த 208…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண் களுக்கு எங்கே பாதுகாப்பு?

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு? நுவரெலியாவில் போராட்டம்! உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இச்சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலாரும் இச்சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஈரானியப் போர் கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப் பேற்றுள்ளது.

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “இந்தக் கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வராமல், திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு தரித்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் முதலில் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” – என்றும்  ஜனாதிபதி திட்டவட்டமாகத்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து நேற்று (4) இரவு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும், இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான கொள்ளளவு மற்றும் வசதிகள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக தலைவர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்பு இலங்கை பாதுகா ப்புச் செயலாளர்

இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு ‘மார்க் 48’ ரக ஏவுகணை (Torpedo) மூலம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. அமைச்சர் குமார ஜயகொடி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவர்  மேலும் உரையாற்றியதாவது,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையை அரசாங்கம்  என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்குள் மற்றும் நெருக்கடி நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில்  முகாமைத்துவ செய்ய முடியும். எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ  அல்லது தாமதமோ ஏற்படாது. நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.எரிபொருள் விநியோக கட்டமைப்பு  தொடர்பில்  அச்சமூட்டி மக்களை தவறாக  வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இறக்குமதி செய்யப்படும் மசகு  எண்ணெய் தொகையை சுத்திகரித்து அவற்றை களஞ்சியப்படுத்தி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.மத்திய கிழக்கில் வாழும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும். இலங்கையர்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளும் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை வழங்குகிறது. தொடர்பு விபரங்கள் இந்த அவசர உதவிப் பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்கள்: +94 117…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று பெருமளவிலான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இன்றைய நாள் (03 03 2026): மொத்தம் 57 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்கள்  மற்றும் இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன  (04 03 2026): நாளை புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த 04 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணிக்கும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்கவெல்ல இது குறித்துக் கூறுகையில்: பாதுகாப்பு கருதி இந்தத் தற்காலிக ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு சில விமானங்கள் மட்டும் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணித்துள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீடுகளில் எரிபொரு ளைச் சேமித்து வைப்பவர்க ளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.அத்தோடு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் மட்டுமே விநியோகத்தைக் கட்டுப்படுத்த QR (கியூ.ஆர்) முறைமை பயன்படுத்தப்படும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், இந்த நேரத்தில் QR முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், எந்நேரமும் அதனை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இன்று (02) காலை 9:45 மணி வரை சுமார் 29 லட்சம் லீட்டர் டீசல் மற்றும் 29 லட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றும் சுமார் 69 லட்சம் லீட்டர் எரிபொருள் சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து நீண்ட வரிசைகளில்…

மேலும் படிக்க