அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பேருந்து கட்டணங் களை அதிகரிக்க வேண்டும் தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்தநிலையில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சட்ட விரோதமான “குஷ்” போதைப் பொருளை இலங்கை க்கு கடத்தி இந்தியர் கைது

சட்டவிரோதமான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்து, அதனை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்தியர் ஒருவர் இன்று (09) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருள் சுமார் ரூ. 2 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டடுள்ளதகைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இன்று (09) அதிகாலை 12.10 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ‘எயார் ஏசியா’ (AirAsia) நிறுவனத்திற்கு சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.சந்தேகநபர் கொண்டு வந்த 2 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அதில் 6 பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 762 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பெண்ணிடம் சங்கிலி அறுத்துச்சென்ற இளைஞர் காவல்துறையில் ஓப்படைப்பு;

கோடெல்லா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண், தனது வீட்டிலிருந்து தம்பரவில கூட்டுறவு சங்கத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது  மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அவரது தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார். பெண்ணின்  அலறல் சத்தம் கேட்டு, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சந்தேக நபரைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் 29 வயதுடையவர். வென்னப்புவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட திருடப்பட்ட நெக்லஸின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. “இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் சமூகப் பொறுப்புள்ள குடிமகனாக, சந்தேக நபரைப் பிடித்த இளைஞரின் உடனடி நடவடிக்கைக்காகவும், ஒரு குற்றத்தைத் தடுத்து, சந்தேக நபர் தப்பிக்க விடாமல் செய்ததற்காகவும் நாங்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை மின்சார சபைக்கு பதிலாக ஆறு அரச நிறுவனங் கள் உருவாக்கம்

இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும். 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய விதிகள் இதன் மூலம் இன்று (9) முதல் நடைமுறைக்கு வருகின்றன.விருப்ப ஓய்வு திட்டத்தைத் (VRS) தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படும் என மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.இந்த மறுசீரமைப்பு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரானின் போர்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழப்பு

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்  தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது.இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரானிய கப்பல் தொடர்பில் சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்படும்! அமைச்சர் விஜித ஹேரத்

ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற RAISINA மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, இலங்கைக்கு அப்பாலான கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நடவடிக்கை, இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் கடல்சார் சாசனம் அதாவது சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டி ஏற்படும். இதில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளினது சங்கங்களின் நீல பொருளாதார சட்டகம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மூலோபாய செயற்பாடுகள் ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கை இந்த விடயங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் 2025 ஆம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களை ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் அமெரிக்கா

ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையின் மனிதாபிமான உதவி குறித்த விவகாரத்தில் அமெரிக்கா தனது அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச செய்தி முகமையான ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters) மற்றும் ஏனைய ஊடகங்களின் தகவல்படி,இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது: இலங்கையின் காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களைத் தற்போதைய சூழலில் ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரானிய தரப்பினர், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு வீரர்களைத் தவறான பிரசார நோக்கங்களுக்காக (Propaganda) பயன்படுத்தக்கூடும் என்றும், அவ்வாறு நடக்காமல் இலங்கை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்த விவகாரத்தை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவே அணுகுவதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இலங்கை இச்சூழ்நிலையில், சர்வதேச நாடுகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இஸ்ரேலின் பணிபு ரியும் இலங்கை யர்கள் அவதானத் துடன் இருக்குமாறு கோரிக்கை

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஹைஃபா (Haifa), நஹாரியா (Nahariya), எக்கர் (Acre), கலிலி (Galilee), அஃபுலா (Afula), கர்மேல் மலைத்தொடர் (Carmel Mountains), நாசரேத் (Nazareth), திபேரியா (Tiberias) உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போது ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.படைத் தலைமையகம் அகற்றப்பட மாட்டாது.பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர,

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்து விரிவான விளக்கமளித்தார். “யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்: “நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, ‘தேசிய பாதுகாப்பு’ என்பற்கே முதலிடம் வழங்கப்படும். பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு,…

மேலும் படிக்க