அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கட்டி முடிக்கப்படாம லுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்க;ரவிகரன்

கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து. கட்டிமுடிக்கப்படாமலுள்ள பாடசாலைக்கட்டடங்கள் தொடர்பில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடுமுழுவதும் 468கட்டிமுடிக்கப்படாத பாடசாலைக்கட்டடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 356பாடசாலைக்கட்டடங்களைக் முழுமைப்படுத்துவதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் சில கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதன்போது பதிலளித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந்தெரிவித்துள்ளார். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

செம்மலை பெரிய குளக்கட்டுகுளம் உடைப்பு கமநல உதவி ஆணையாள ருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி;

செம்மலை பெரியகுளக்கட்டு குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கமநல உதவி ஆணையாளருக்கு நேரில் காண்பித்த ரவிகரன் எம்.பி; சீரமைப்பை துரிதப்படுத்தவும் வலியுறுத்து. முல்லைத்தீவு – செம்மலையில் உள்ள பெரியகுளம் உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 27.02.2026அன்று நேரில் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அத்தோடு உடைப்பெடுத்துள்ள குறித்த குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்தத 22.02.2025அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார். குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு – செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பெரியவிளாத்தி க்குளம் அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளிக்கு நேரில் சென்ற ரவிகரன் எம்.பி; அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு தொடர்பில் ஆராய்வு வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைத்தல் மற்றும் வாய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் பகுதியில் கடந்தவருடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டிருந்தது. இதன்போது புல்மோட்டை வயல்வெளிக்கான அணைக்கட்டு அமைப்பது தொடர்பிலும், வாய்க்காலை சீரமைப்பதுதொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் குறித்த புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டை அமைக்குமாறும், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கொழும்பு துறைமுக நகரக் கடற் பரப்பிலிருந்து ஆணின் சடலம்

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் கடந்த 28ம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்

நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுங்கேணி பிரசேவைத்திய சாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்; குறைபாடுகள் குறித்து ஆராய்வு.

நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்; குறைபாடுகள் குறித்து ஆராய்வு. வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு 26.02.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் நெடுங்கேணி வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச்சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். அத்தோடு வைத்தியசாலையில் காணப்படும் மிகவும் முக்கியமான பௌதீகவளப் குறைபாடொன்றைச் சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை தம்மிடம் கைளிக்குமாறு வைத்தியரிடம் கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்முறை தமக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைத்தியசாலைக் குறைபாடொன்றை தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்தார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி

யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி – பொம்மைவெளி பகுதியில் சம்பவம்! யாழில் பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம் (20. 12. 2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா…

மேலும் படிக்க
அண்மை செய்தி 

மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வௌ்ள அபாய முன் எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் சில நீரேந்து பகுதிகளில் பெய்த மழை மற்றும் மேல்ப் பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறந்து விடப்பட்டமை காரணமாகச் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நேற்று (18) அறிவிக்கப்பட்டிருந்தது. கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு…

மேலும் படிக்க
அண்மை செய்தி 

எட்டு மாவட்டங்களில் டெங்கு அபாயங்கள்

நாட்டில், எட்டு மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை   நாட்டில், எட்டு மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுச்சூழல் மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதில் காட்டப்படும் அசிரத்தையே இந்நிலைமைக்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார். எனவே, டெங்கு பரவலைக் குறைப்பதற்காக பொதுமக்கள் அதிகளவு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்,டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா,கண்டி,காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்…

மேலும் படிக்க