உலக அரசியல். கட்டுரை 

அணுசக்தி சிவப்புக் கோடுகளும் ஐரோப்பாவின் எரிசக்தி சூதாட்டமும்

⧉▬▬▬▬▬▬▬▬▬▬அணுசக்தி சிவப்புக் கோடுகளும் ஐரோப்பாவின் எரிசக்தி சூதாட்டமும் நான்காம் ஆண்டுப் போர் அதன் மிகக் கொந்தளிப்பான கட்டத்தில்▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═══════════════════⊰❉⊱ ✧. மொஸ்கோவின் அணுசக்தி சமிக்ஞை: “சந்தேகத்திற்கு இடமில்லை” போரின் நான்காம் ஆண்டில் மிகவும் ஆபத்தான மாற்றம் ஒன்று தென்படுகிறது: மொஸ்கோ மீண்டும் வெளிப்படையாக அணுசக்தி சொல்லாடலை முன்வைக்கிறது. Dmitry Medvedev, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர், ஐக்கிய இராச்சியம் அல்லது பிரான்ஸ் உக்ரைனுக்கு அணுசக்தி தொடர்பான தொழில்நுட்ப உதவி வழங்கினால் அது “சூழ்நிலையை முற்றிலும் மாற்றிவிடும்” என்று எச்சரித்தார். ரஷ்யா தனது வசம் உள்ள எந்தவொரு ஆயுதத்தையும் — தந்திரோபாய அணு ஆயுதங்கள் உட்பட — பயன்படுத்தத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்கள மொழியில் சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச்சிங்களமொழியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 26.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். குறித்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டதரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன.இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக, பொலிஸார்  இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.இதேவேளை, காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் தமது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

நெடுங்கேணி பிரசேவைத்திய சாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்; குறைபாடுகள் குறித்து ஆராய்வு.

நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்; குறைபாடுகள் குறித்து ஆராய்வு. வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு 26.02.2026இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் நெடுங்கேணி வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் நலன்புரிச்சங்கத்தினர், பிரதேசசபை உறுப்பினர்களான இ.கிரிதரன், பொ.தேவராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார். அத்தோடு வைத்தியசாலையில் காணப்படும் மிகவும் முக்கியமான பௌதீகவளப் குறைபாடொன்றைச் சீர்செய்வது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை தம்மிடம் கைளிக்குமாறு வைத்தியரிடம் கேட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்முறை தமக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைத்தியசாலைக் குறைபாடொன்றை தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளன.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்! பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும், புதிய ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தென்மராட்சியில் நேற்றைய தினம் பாரிய கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று காலை தென்மராட்சிப் பிரதேசத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரப்பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன. இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்:சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர்சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான செ.மயூரன் மற்றும் கு.தினேஸ்உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க