செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் செட்டிகுளம் பகுதியில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயம்

வவுனியாவில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 25 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மா, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன…

மேலும் படிக்க