மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
நாட்டில்,2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோல்ட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.Hayleys Fentons Limited நிறுவனம் இத்திட்டத்தை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாவிற்கு வழங்கப்படவுள்ள இத்திட்டத்தை மார்ச் 2027 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான ஸ்மார்ட் வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல்,தேசிய நீர் வழங்கல் சபையுடன்…
மேலும் படிக்க