சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சிங்களவர்களுக்கு கொக்குத் தொடுவாயில் காணிவழங்க இடமளிக்க முடியாது; ரவிகரன் எம்.பி

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிவழங்க இடமளிக்க முடியாது; கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்புத் தொடர்பிலான விசேடகலந்துரையாடல் 22.12.2025நேற்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை; சீனத் தூதுக்குழுவும் இன்று வருகை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிவாரண உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திப்பதோடு, இன்று மதியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். ​தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இரவு இலங்கையிலிருந்து…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

யாழ் பல்கலைக் கழகத்தில் வெடித்தது போராட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தில் வெடித்தது போராட்டம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களை கைது செய்த சம்பவத்திற்க்கு எதிர்ப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை போராட்டம் நடைபெற்றது.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வேலன் சுவாமிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்

தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார் சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தின்போது மதகுரு எனவும் பாராது வேலன் சுவாமிகள் வலுக்கட்டாயமாக  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். நேற்று மதியம் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி  காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டிருந்தவேளை வேலன் சுவாமிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

தையெட்டியில் போராட்டம் செய்த பலர் கைது காவல்துறை அடிதடி

தையெட்டியில் போராட்டம் செய்த பலர் கைது காவல்துறை அடிதடி

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

ஈழத்தமிழர்கள் அனைவரின் விருப்பம் அறிந்து செயலாற்றுக ஸ்டாலின் அவர்களுக்கு பழ நெடுமாறன் வேண்டுகோள்

பெரும் தியாகம் புரிந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரின் விருப்பம் அறிந்து செயலாற்றுக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் வேண்டுகோள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி;

தித்வா புயலினால் வன்னியில் ஏற்பட்ட பாதிப்புக்களை பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி; பாதிப்புக்களை சீர்செய்ய அரசின் 2026பாதீடு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை காணொளி https://www.facebook.com/reel/839573708867890 தித்வா புயலினால் முல்லைத்தீவு, வுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார். அதேவேளை மிகவும் கடுமையாக தித்வாபுயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் குளச்சேதங்களுக்கான நிரந்தரத்தீர்வு, பொருத்தமற்ற வாழ்விட மக்களுக்கான மாற்று வாழ்விட ஏற்பாடு, கைவிடப்பட்ட குளங்களை பராமரித்தல், ஆற்றுப்படுக்கைகளை எல்லைப்படுத்தல், குளங்களை உரிய திணைக்களங்களிடம் பாரப்படுத்தல், வெள்ளத்தால் தனிமைப்படுத்தபடும் கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான நிரந்தரத்தீர்வு, விவசாய வீதிகள் சீரமைப்பு, வெள்ளநீர்-உவர்நீர் கட்டுப்பாட்டு அணைகள் கட்டுமானம், நகர்ப்பகுதிகளுக்கான நிரந்தர வடிகாலமைப்பு நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அரசின் 2026 பாதீடு வாய்ப்பளிக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் 19.12.2025இன்று இடம்பெற்ற திடீர்…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை

தேசத்தின் புதல்வி துவாரகா அவர்கள் நேற்றைய தினம் திருகோணமலை குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆற்றிய உரை  இது தேசத்தின் புதல்வி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் ஆகும்:     ‘எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழ மண்ணில் மட்டுமன்றி, உலகெங்கும் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணமானவர்கள் எமது மாவீரர்கள். தம்மையும், தமது வாழ்வையும் பற்றியே மட்டும் சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் தமது மக்கள் வாழ வேண்டும், எதிர்காலச் சந்ததி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், தமிழ்த் தாயின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற உன்னத சிந்தனையோடு தம்மையே ஈகம் செய்தவர்கள் எமது மாவீரர்கள். தமது உயிரையே வேலியாக்கி, எமது மண்ணையும், மக்களையும், மொழியையும் காத்த அந்த அற்புதப் பிறவிகள் மண்ணிலும், கடலிலும், வான்வெளியிலும் புரிந்த சாதனைகளை…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

தலைவர் அவர்கள் இருப்பு குறித்து மூத்த போராளிகள் கருத்து வீரவணக்க நிகழ்வை புறக்கணிக்க வேண்டுகோள்

தலைவர் அவர்கள் இருப்பு குறித்து மூத்த போராளிகள் கருத்து வீரவணக்க நிகழ்வை புறக்கணிக்க வேண்டுகோள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி 

விளக்குக் கொளுத் தும் இழுக்குப் பிறவிகளே! இரண்டகர் கள் வரிசையில் இடம் பெற்றீர்! காசி ஆனந்தன்

விளக்குக் கொளுத்தும் இழுக்குப் பிறவிகளே! இரண்டகர்கள் வரிசையில் இடம் பெற்றீர்! இழிவுற்றீர! காசி ஆனந்தன் அறிக்கை உலக வரலாற்றில் முதல் தடவையாக உயிரோடு வாழும் ஓர் விடுதலை இயக்கத் தலைவனுக்கு விளக்குக் கொளுத்தும் உணர்ச்சியற்ற இழிபிறவிகளின் ஒன்று கூடல். மனம் துடிக்கிறது. சினம் வெடிக்கிறது.. “தலைவர் இல்லை” என்று சொல்கிறவர்கள் இரண்டு வகை. “ தலைவர் இல்லை” என்று நினைப்பவர்கள் சிலர். “தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் சிலர். “ தலைவர் இல்லை” என்று நினைப்பவர்கள் ‘தலைவருக்கு எதற்காக விளக்குக் கொளுத்த வேண்டும்?’ என்று தலைவர் மீதுள்ள பற்றால்-பாசத்தால் விளக்குக் கொளுத்திகளை எதிர்க்கிறார்கள். “தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் தலைவருக்கு விளக்குக் கொளுத்தியே தீருவது என்று தலைக்கனத்தோடு திமிர் கொண்டு குதிக்கிறார்கள். “தலைவர் இருக்கக்கூடாது” என்று நினைப்பவர்கள் யார்? இயக்கத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிராகத் தவறிழைத்து புலிகள்…

மேலும் படிக்க