உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அத்துடன், இந்தத் தாக்குதல்களின் காரணமாக இலங்கை பிரஜை ஒருவர் உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர். எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் நடவடிக்கை

பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் உருவாகியுள்ள எரிபொருள் வரிசை தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இத்தருணத்தில் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இப்போதே முறையான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைது

ரூ. 500 மில்லியனுக்கும் (ரூ. 50 கோடி) அதிகமான தெரு மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) பிற்பகல் அஹுங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, 3 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், பலபிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 13.032 கி.கி. ஐஸ் மற்றும் 14.112 கி.கி. ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். இவர்களில் கைது செய்யப்பட்ட 41 வயதான, அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து 9 மி.மீ. பிஸ்டல் வகை கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும், 3.8 மி.மீ, வகை துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..கைதான இரு சந்தேகநபர்களும் 41, 45 வயதுடைய பலபிட்டிய, அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர்

மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மட்டு கல்முனை சாலை வழியே பழுதான டிப்பர் ஒன்றை உழவு இயந்திரம் ஒன்று கட்டி இழுந்துக்கொண்டு சென்ற சமயம் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விபத்து நடைபெற்ற போது உழவு இயந்திர சாரதி கீழே குதித்து தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல் துறையினர். மேற்க்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கில். இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, நோர்வே அரசு ஆழ்ந்த கவலை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நோர்வே வலியுறுத்தியுள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின் போதே நோர்வே வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இதனைத் தெரிவித்தார். நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்னம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:- “2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி!

வடக்கின் பெரும் நீர்ப்பாசனத்தை நசுக்கப் பெரும் சதி – இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி! வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும் 28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர், குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரையின் மீது கொண்ட ஆசை காரணமாக ஒருதலைப் பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் -கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.அவர் குறித்த கருத்தை கூறும் முன்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன.இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக, பொலிஸார்  இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.இதேவேளை, காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் தமது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு.

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 73இல், 61 பயனாளிகள் உள்ளீர்ப்பு. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்திமூன்றாம் கட்டமானது கடந்த 23.02.2026 அன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 61 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திமூன்றாம் கட்டத்துடன் இதுவரையில் 3,936 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்வோம் வளம் பெறுவோம் 73ஆம் கட்டத்திற்குரிய நிதி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றையதினம் (25) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொணராகலை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை, மொணராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் இறுதிக் கலந்துரையாடல்!

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரச அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக…

மேலும் படிக்க